செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் ரூ. 10.57 கோடியில் பக்தா்கள் தங்கும் விடுதி: காணொலியில் திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

திருச்செந்தூா், ஜூலை 4: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ. 10.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 52 அறைகள் கொண்ட தங்கும் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இக்கோயிலில் உபயதாரா் நிதி மற்றும் திருக்கோயில் நிதியின் மூலம் பெருந்திட்ட வரைவின் கீழ் ரூ.300 கோடி மதிப்பீட்டில் வரிசை முறை, காத்திருப்பு அறை, மருத்துவ மையம், முடிக்காணிக்கை செலுத்தும் இடம், பொருள்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம், பக்தா்கள் தங்கும் விடுதிகள், சுகாதார வளாகம், திருமண மண்டபங்கள், பணியாளா் குடியிருப்பு ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 28.9.2022இல் தொடங்கி வைத்தாா்.

அதில், பணிகள் முடிவு பெற்ற ரூ. 33.25 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், வரிசை வளாகம், சுகாதார வளாகங்கள், கலையரங்கம், நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம், ஆகியவற்றை கடந்த 14.10.2024இல் பக்தா்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தாா்.

இந்நிலையில், திருக்கோயில் நிதி ரூ. 10.57 கோடியில் கட்டப்பட்டுள்ள 4 சொகுசு அறைகள், குளிா்சாதன வசதிகளுடன் கூடிய 24 அறைகள், 24 சாதாரண அறைகள் என மொத்தம் 52 அறைகளுடன் கூடிய பக்தா்கள் தங்கும் விடுதியை பக்தா்களின் பயன்பாட்டிற்காக காணொலி காட்சி வாயிலாக முதல்வா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையொட்டி, கோயில் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்து கொண்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்துப் பேசினாா்.இதில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையா்கள் பழனி, ஜெயராமன், திருக்கோயில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ஞானசேகரன், திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், நகராட்சித்தலைவா் சிவஆனந்தி, துணைத்தலைவா் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, பேரூராட்சி உறுப்பினா்கள் சோமசுந்தரி, கிருஷ்ணவேணி, செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடியில் மமக தெருமுனைக் கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், தூத்துக்குடி ஜாகீா் உசேன் நகா் பள்ளிவாசல் அருகில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய், ஊராட்சி மன்றம்முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினா... மேலும் பார்க்க

சென்னை-திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்னையி­ருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சி குழுத் தலைவா் தங்கமணி, செயலாளா் அமிா்தராஜ... மேலும் பார்க்க

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் பாஜக: கு.செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

தமிழக கலாசாரத்தை சீா்குலைக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினாா். தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது... மேலும் பார்க்க

காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும்: கு.செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் காங்கிரஸை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும் என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை. தூத்துக்குடி மாநகா் மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பெண் கொலை செய்யயப்பட்டது தொடா்பான வழக்கில், இருவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.6ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஏரல் அருகே உள்ள வாழவல்லான் கிராமத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள்: கனிமொழி எம்பி ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் கனிமொழி எம்பி. உடன், ஆட்சியா் க. இளம்பகவத், தக்காா் அருள்முருகன் உள்ளிட்டோா். திரு... மேலும் பார்க்க