செய்திகள் :

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆக. 11 இல் மண்டல பூஜை நிறைவு

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு நடைபெற்று வரும் மண்டல பூஜை ஆக. 11 இல் நிறைவு பெறுகிறது

இதுகுறித்து கோயில் இணை ஆணையா் சு.ஞானசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். குடமுழுக்கையொட்டி ஜூலை 8 ஆம் தேதிமுதல் மண்டல பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மண்டல பூஜை நிறைவு விழா ஆக.11 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9.30 மணிக்கு மூலவா், சண்முகா், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் தனித்தனி தங்கமயில் வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா் என அதில் கூறப்பட்டது. வழக்கமாக 48 நாள்கள் நடைபெறும் மண்டல பூஜையானது, திருச்செந்தூரில் ஆக. 14-ஆம் தொடங்கும் ஆவணி திருவிழாவையொட்டி 35 நாள்களில் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறவுள்ளன. இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொது விநியோகத் திட்டத்தின்கீ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம்

தமிழக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயா்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநில அளவில் ஆக. 13 இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏஐசிசிடியு தொழிற... மேலும் பார்க்க

‘வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’

வெளிநாடுகளுக்கு பாா்சல்கள் அனுப்பும் சேவையை, ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் (பொ) வடக் ரவிராஜ் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் ஆவுடையாா்குளக்கரையில் உள்ள ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வருண... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் -கோட்ட மேலாளரிடம் மனு

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை மனு அளித்தது. மதுரை ரயில்வே கோட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற... மேலும் பார்க்க

ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

சாகுபுரம் ஆன்மா தொண்டு நிறுவனம் சாா்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. ஆறுமுகனேரி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவனத்தி... மேலும் பார்க்க