செய்திகள் :

திருத்தணி: கருக்கலைப்பு செய்த 17 வயது மாணவி உயிரிழப்பு - போலி பெண் டாக்டர் சிக்கிய பின்னணி!

post image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் நர்சிங் படித்து வந்தார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவனும் காதலித்து வந்தனர். அந்த சிறுவன், மாணவிக்கு சகோதரர் உறவு முறையாகும். அதனால் இவர்களின் காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பின. அதனால் மாணவியை அழைத்துக் கொண்டு சிறுவன் வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து மாணவி தரப்பில் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் சிறுவனைப் பிடித்த போலீஸார் அவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்தனர். இந்தச் சூழலில்தான் மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவல் தெரிந்து அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

கருக்கலைப்பு

இதையடுத்து கர்ப்பத்தை யாருக்கும் தெரியாமல் கலைக்க முடிவு செய்த மாணவியின் குடும்பம், ஆந்திர மாநிலம் பண்ணூர் என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு மருத்துவம் படிக்காத பெண் ஒருவர் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்திருக்கிறார். பின்னர் மாணவியை அழைத்துக் கொண்டு அவரின் குடும்பம் தங்களின் சொந்த ஊருக்கு வந்தனர். கருக்கலைப்பு செய்த பிறகு மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால் அவரை திருத்தணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. அதே நேரத்தில் மாணவியின் உடல் நலம் மோசமானது. அதனால் வேறுவழியின்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மாணவியை அவரின் குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்துக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு மாணவிக்கு கருக்கலைப்பு செய்தது யாரென்று விசாரித்தனர். விசாரணையைத் தொடர்ந்து ஆந்திராவுக்குச் சென்ற போலீஸார், கருக்கலைப்பு செய்த பெண், அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் என இருவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு கருக்கலைப்புக்கு காரணமாக இருந்த மாணவியின் குடும்பத்தினர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸார் ஆலோசித்து வருகின்றனர்.

ஆம்பூர் கலவர வழக்கு: `22 பேர் குற்றவாளிகள்’ -முன்னாள் எம்.எல்.ஏ சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவு!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி திடீரென மாயமானார். அது குறித்து, பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படைய... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் வெள்ளம்: அடித்துச் செல்லப்பட்ட கார் - தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பமே பலியான துயரம்!

திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 43). இவரின் மனைவி பவித்ரா (40), மகள்கள் சௌஜைன்யா (8), சௌமையா (6). சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் கடந்த 15 ஆண்டுகளாக கட... மேலும் பார்க்க

கூடலூர்: போக்கு காட்டும் புலி, கேரளாவிலிருந்து பிரத்யேக கூண்டை வரவழைத்த வனத்துறை - என்ன நடக்கிறது?

நீலகிரி மாவட்டத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்கொள்ளல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த... மேலும் பார்க்க

மும்பை: 'தந்தையின் பாதை எனக்கு வேண்டாம்' - தாதா வரதராஜன் மகன் மோகன் மறைவு; தமிழ் அமைப்புகள் இரங்கல்

மும்பையில் வரதராஜன் முதலியார் இறந்த பிறகு அவரது மகன்கள் யாரும் அவரது வழியைப் பின்பற்றாமல் தங்களுக்குத் தனித்தனி வழியை ஏற்படுத்திக்கொண்டனர். அதில் மோகன் மட்டும் தொடர்ந்து மும்பையில் வாழ்ந்து வந்தார்.மு... மேலும் பார்க்க

விருதுநகர்: ஏலக்காய் தோட்டத்தில் கள்ளச்சாராயம், வனவிலங்கு வேட்டை; 6 பேர் கைதின் பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் சூரியன்கல் எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் ஏலக்காய், கிராம்பு உட்பட நறுமணப் பொருட்கள் விளைவிக்கப்படுகின்றன.இந்த எஸ்டேட்டை தேவதானத்தைச் சே... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழப்பு - வேலூரில் அதிர்ச்சி!

வேலூர், விருப்பாட்சிபுரம் காந்தி நகரைச் சேர்ந்த முடிதிருத்தும் சலூன் தொழிலாளி ரமேஷ். இவரின் 13 வயது மகன் சஞ்சய், வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி ஆவார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, நேற்று இரவு 8 மணியள... மேலும் பார்க்க