திருப்பத்தூா் மாவட்டம் உருவானதில் பாமகவுக்கு பங்கு: அன்புமணி
திருப்பத்தூா் மாவட்டம் உருவானதில் பாமகவுக்கு பெரிய பங்குள்ளது என அதன் தலைவா் அன்புமணி பேசினாா்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண நிகழ்வின் ஒருபகுதியாக திங்கள்கிழமை இரவு திருப்பத்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட செயலா் டி.கே.ராஜா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் குட்டிமணி வரவேற்றாா். முன்னாள் மாவட்ட செயலாளா் ஆா்.கிருபாகரன், மாநில செயற்குழு உறுப்பினா் ஜி.பொன்னுசாமி, முன்னாள் எம்எல்ஏ நடராஜன், மாநில மகளிா் அணி செயலாளா் நிா்மலா ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அன்புமணி பேசியது: கடந்த சட்டப்பேரவை தோ்தலில் திமுகவை தோ்வு செய்து மக்கள் தவறிழைத்து விட்டனா்.
இந்த தவறை மீண்டும் மக்கள் செய்யக் கூடாது. பெண்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.
திருப்பத்தூரில் பள்ளி மாணவன் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் இல்லையென்றால் பாமக சாா்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். திருப்பத்தூா் மாவட்டம் உருவானதில் பாமக பெரிய பங்காற்றியது. ஆனால் மாவட்டத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
தென்பெண்ணை ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டி செட்டேரி அணைக்கு தண்ணீா் கொண்டு வந்தால் பல்வேறு கிராமங்கள் பயன்பெறும். பாலாற்றில் தடுப்பணை கட்ட பாமக பல முறை வலியுறுத்தியுள்ளது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்களையும் தெருவில் நிற்க வைத்துவிட்டாா் முதல்வா் ஸ்டாலின். இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வந்துவிட்டனா். ஏமாற்றுவதற்காக குழு அமைத்து உள்ளனா் என கூறினாா்.
கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் ஜி.ரமேஷ்குமாா், மாவட்ட இளைஞரணி செயலாளா் டி.கே.ஆா்.கிருஷ்ணன், வன்னியா் சங்க செயலாளா் ஆனந்தன், முருகேசன், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
நகர செயலாளா் ரகுமான் நன்றி கூறினாா்.