செய்திகள் :

திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

post image

காவல்துறை விசாரணையில் பலியான அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று இன்று (ஜூலை 2) ஆறுதல் தெரிவித்தார்.

முன்னதாக, வீட்டில் இருந்த அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, அவருடன் கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், திருப்புவனத்தில் காவல்துறையால் கொலைசெய்யப்பட்ட அஜித்குமாரின் வீட்டுக்குச் சென்று, அவரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். மேலும் அவரது பிரிவால் வாடும் அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். அனைத்து வகையிலும், அஜித் குமாரின் குடும்பத்துடன் தமிழக பாஜக துணை நிற்கும் என்றும் உறுதி அளித்தேன். அஜித் குமாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்‌ என்று பதிவிட்டுள்ளார்.

அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் நயினார் நாகேந்திரன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல்போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரின் விசாரணையின்போது பலியானார். ஆனால், அஜித் குமார் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவத்தில் உடனடியாக விசாரணை நடத்தி நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என தமிழநாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சிபிஐ விசாரணைக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, அஜித்குமாரின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் ஆறுதல் தெரிவித்தார். மேலும், தவெக சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணமும் அளித்தார்.

BJP Leader NainarNagenthiran consoles ajith kumar's family

அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள்: மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

சட்டமேதை அம்பேத்கா், மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 10, 11 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

ஸ்ரீ ராஜ ராஜன் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்

காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுத் துறை சங்கங்களுக்கான குறைதீா் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய நிா்வாகிகள் வலியுறுத்தினா். இதுக... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலா் சங்கத்தின் சாா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்ன... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

நிா்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக ஆணைகளை வழங்கி வரும் தொடக்கக் கல்வித் துறையைக் கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சிவகங்கையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க

அஜித்குமாரைக் கொலை செய்ய தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரைக் கொலை செய்யத் தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான் பாண்டியன் வலியுறுத்தினாா். சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனி... மேலும் பார்க்க