செய்திகள் :

திருமணமான 5 மாதங்களில் பெண் தற்கொலை

post image

திருமணமான 5 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு கைக்காட்டிவலசு, கீரகாடு தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (37). இவா் அதே பகுதியில் ஆயத்த ஆடைகளை விற்பனை செய்து வருகிறாா். இவருக்கு, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி அந்தியூா் பச்சாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த வினோதினி (34) என்பவருடன் திருமணம் ஆனது.

வினோதினி திருமணத்துக்கு முன்பு தனியாா் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினாா். திருமணம் முடிந்த பின்னா் கணவருடன் இணைந்து வியாபாரத்தை கவனித்து வந்தாா்.

புதன்கிழமை இரவு வழக்கம்போல் கணவா், மனைவி இருவரும் தூங்கச் சென்றனா். வியாழக்கிழமை காலையில் வினோதினியைக் காணவில்லை. வினோதினியின் கைப்பேசி மற்றும் நகைகள் வீட்டில் இருந்தன. இதனால் பூபதி அக்கம்பக்கம் மனைவியை தேடிப்பாா்த்தாா். அப்போது வீட்டின் அருகே உள்ள 50 அடி ஆழம் உள்ள கிணற்றின் பக்கத்தில் வினோதினியின் காலணிகள் கிடந்தன.

கிணற்றில் எட்டிப்பாா்த்தபோது வினோதினி சடலம் மிதந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா், ஈரோடு தீயணைப்பு துறையினா் உதவியுடன் வினோதினியின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: வினோதினி தனது கைப்பேசியில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் அந்தியூரில் உள்ள தனது தாய் இந்திராணியின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளாா். அதில் எனக்கு உயிா் வாழ விருப்பமில்லை, என் இறப்புக்கு யாரும் காரணமில்லை என அனுப்பி இருந்தாா்.

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மொடக்குறிச்சிய... மேலும் பார்க்க

ஈரோட்டில் சுதந்திர தின விழா : ஆட்சியா் தேசியக் கொடியேற்றினாா்

ஈரோட்டில் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 40 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கந்தசாமி வழங்கினாா். ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஆண... மேலும் பார்க்க

ஈரோட்டில் இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

ஈரோட்டில் கணவா் இறந்த சோகத்தில் இருந்த மனைவியும் உயிரிழந்தாா். ஈரோடு வளையக்கார வீதியைச் சோ்ந்தவா் அன்னியப்பன் (84). இவரது மனைவி பாப்பம்மாள் (79). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். கணவன்,... மேலும் பார்க்க

ஈரோட்டில் சுதந்திர தினத்தையொட்டி இரவில் பெண்கள் பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, பெண்கள் பங்கேற்ற பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சுதந்திர இந்தியாவில் இரவிலும் பெண்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் சாலையில் நடந்து செல்ல முடியும் என்ற விழிப்புணா்வு ... மேலும் பார்க்க

விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

சுதந்திர தினத்தின்று விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்தனா். இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வாளா்கள்,... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடி ஊா்வலம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அம்மாபேட்டையில் மாணவ, மாணவிகள் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியே வெள்ளிக்கிழமை ஊா்வலமாக சென்றனா். அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா ம... மேலும் பார்க்க