செய்திகள் :

``திருமண செலவுக்கு போட்ட பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாலை..'' - எளிமையாக திருமணம் செய்த தம்பதி

post image

திருமணம் என்றாலே பல லட்சம் செலவு பிடிக்கும். ஆனால் மகாராஷ்டிரா வாலிபர் ஒருவர் தனது திருமணத்தை அடுத்தவர்கள் பார்த்து பெருமைப்படும் அளவுக்கு செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் உள்ள சுஷா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் எகுடெ (29). இவர் சீர்திருத்த முறையில் திறந்த வெளியில் பொதுமக்களை அழைத்து மிகவும் எளிய முறையில் திருமணம்செய்து கொண்டார்.

விவசாயிகளுக்காக சாலை அமைத்த தம்பதி

முதுகலை வேளாண் பட்டதாரியான எகுடே தனது திருமணத்தை எளிய முறையில் நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த நிபந்தனையை முன்வைத்து திருமணத்திற்கு பெண் பார்த்தார்.

யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலியின் குடும்பத்திற்கு எகுடேயின் நிபந்தனைகள் பிடித்திருந்தன. இதையடுத்து இருவரது திருமணம் எளிய முறையில் நடந்தது.

அதே சமயம் திருமணத்திற்கு செலவு செய்ய திட்டமிட்டு இருந்த தொகையில் தனது கிராம விவசாயிகளுக்காக சாலை ஒன்றை எகுடே அமைத்து கொடுத்து அனைவரது பாராட்டை பெற்றுள்ளார்.

இது குறித்து எகுடே கூறுகையில், "எங்களது கிராம விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாய பொருள்களை கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். மாட்டு வண்டிகூட சரியாக போக முடியாது. அதுவும் மழைக் காலம் என்றால் அந்த வழியை பயன்படுத்தவே முடியாது. எனவே இச்சாலையை அமைத்துக்கொடுத்தால் விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று கருதினேன்.

எனவே 50 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த விவசாய சாலையை அமைத்து கொடுத்திருக்கிறோம். குண்டு குழிகள் சரி செய்யப்பட்டு பயன்படுத்தும் வகையில் சாலையை உருவாக்கி இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

எகுடேயின் செயல் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது. உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க மக்களே!

`இந்தியாவுக்கு எதிரானப் போரில் எத்தனை பேர் பங்கெடுப்பீர்கள்?' - மதகுருவின் கேள்விக்கு மக்களின் பதில்

ஜம்மு காஷ்மீர் பஹல்கம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே வார்த்தைப்போர் தொடர்ந்து வருகிறது. அதே நேரம் பாகிஸ்தானிலும் அந்த அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்திருக்கிறது. இதை தெளிவ... மேலும் பார்க்க

36 இலக்கத்தில் வங்கிக் கணக்குக்கு வந்த பணம்; சில மணி நேரத்தில் எலான் மஸ்குக்கு டஃப் கொடுத்த விவசாயி!

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிப்பவர் அஜித். சாதாரண விவசாயத் தொழிலாளியான இவரின் வங்கிக் கணக்கில் சில ஆயிரங்களை சேமிப்பாக வைத்திருந்தார். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அவரின... மேலும் பார்க்க

`house of horror' - திகில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 3 சிறுவர்கள் மீட்பு.. பகீர் வாக்குமூலம்

ஸ்பெயினின் புறநகரான ஓவியோடோவில் ஒரு வீடு. அந்த வீட்டிலிருந்து வித்தியாசமான சத்தங்கள் வருவதாக காவல்துறைக்கு புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது காவல்துறை. அந்த வீட்டில் அமெர... மேலும் பார்க்க

Aishwarya Rai: ``விராட் கோலியின் உறுதி, ஆக்ரோஷம் பிடிக்கும்'' - மனம் திறந்து பாராட்டிய ஐஸ்வர்யா ராய்

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதன்மூலம் ஐ.பி.எல் தொடர்களில் அதிக முறை, 500 ரன்களுக்கு ... மேலும் பார்க்க

``அனுமதி வாங்கி தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்'' - டிஸ்மிஸ் ஆன CRPF வீரர் சொல்வதென்ன?

ஜம்முவை சேர்ந்த முனீர் அகமத் என்பவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 2017-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த மினால் கான் என்ற பென்னை 2022-ல் திருமணம் செய்தார். இந்நிலையில்... மேலும் பார்க்க

`தெரு விலங்குகளை பராமரிக்க MBBS படிப்பை விட்ட இளம் பெண்' - யார் இந்த த்ரிஷா படேல்?

விலங்குகள் மீதான அதீத பாசத்தால், இளம் பெண் ஒருவர் தனது எம்பிபிஎஸ் படிப்பை விட்டு விட்டு தெரு விலங்குகளை பராமரித்து வருகிறார். எம்பிபிஎஸ் படிப்பை விட்டதும் இல்லாமல், இந்த விலங்குகளை பராமரிப்பதற்காக தனத... மேலும் பார்க்க