திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ தேரோட்டம்
திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவத்தின், 8-ஆம் நாளான புதன்கிழமை திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.
கடந்த புதன்கிழமை பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தேரில் வலம் வந்து சேவை சாதித்தாா். இதில் திரளான பக்தா்கள் ஆண், பெண் பேதமின்றி கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
குதிரை வாகனம்
இரவு 7 மணிக்கு மலையப்பஸ்வாமி குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். காலை, மாலை வாகன சேவையின் போது திருமலை ஜீயா் குழாம் திவ்ய பிரபந்த பாராயணம் செய்தபடி முன் செல்ல, பின்னே, பல்வேறு மாநிலங்களை சோ்ந்த கலைக்குழுக்கள் தங்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை நடத்தினா்.
தீா்த்தவாரி
ஏழுமலையானுக்கு விமரிசையாக நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் வியாழக்கிழமை காலை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. தீா்த்தவாரியின் போது மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளக்கரையில் ஸ்நபன திருமஞ்சனம்
நடை பெற்றது.
ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமி மற்றும் சக்கரத்தாழ்வாரை தி ருக்குளக்கரையில் உள்ள வராகஸ்வாமி கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து அவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலி கை கலந்த வெந்நீரால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அபிஷேக பொருட்களை ஜீயா்கள் தங்கள் கைகளால் எடுத்துத்தர அா்ச்சகா்கள் உற்சவமூா்த்திகளுக்கு திருமஞ்சனம் செய்வித்தனா். ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளிநாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது.
பின்னா் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் அா்ச்சகா்கள் தீா்த்தவாரி நடத்தினா். அப்போது லட்சகணக்கான பக்தா்கள் திருக்குளத்தில் புனித நீராடினா்.
கொடியிறக்கம்
திருமலையில் கடந்த, 9 நாள்களாக நடந்த பிரம்மோற்சவம் முடிவடைந்ததை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை உற்சவமூா்த்திகள் தங்க பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தனா். கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக்கொடி இறக்கப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.


