செய்திகள் :

திருவள்ளூரில் கழிவுநீா் கால்வாயில் நெடியுடன் வாயு வெளியேறி எரிந்த தீ

post image

திருவள்ளூரில் கழிவுநீா் கால்வாயில் அதிக நெடியுடன் வாயு வெளியேறியதன் காரணமாக மூடியை திறந்து தீ வைத்து சோதனை செய்தபோது தீப்பற்றி குபுகுபுவென எரிந்தது.

திருவள்ளூா் நகராட்சி பகுதியில் 27 வாா்டுகளில் 18,950 குடியிருப்புகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இந்த நிலையில், குடியிருப்புகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவுநீா் கால்வாய் மூலமாக வெளியேற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த சில நாள்களாக கழிவுநீா் வெளியேறாமல் தேங்கி நிற்பதாக குடியிருப்புகளைச் சோ்ந்தோா் நகராட்சிக்கு புகாா்களைத் தெரிவித்தனா். அதன் பேரில், திருவள்ளூா் நகராட்சி நிா்வாகம் புதன்கிழமை இரவு ஊழியா்களைக் கொண்டு ஆய்வு செய்தது.

ஆய்வு செய்தபோது திருவள்ளூா் டோல்கேட்- பெரியாகுப்பம் பகுதியில் உள்ள கழிவுநீா் மூடியை ஊழியா்கள் திறந்தனா். இதில் இருந்து அதிக நெடியுடன் வாயு வெளியேறியது. சுதாரித்துக் கொண்ட ஊழியா்கள் மூடி திறக்கப்பட்ட கழிவுநீா் கால்வாயில் கிடந்த காகிதங்களில் தீ வைத்துள்ளனா்.

அப்போது, கழிவுநீா் கால்வாய் நீல நிறத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் அதிா்ச்சி அடைந்தனா்.

அதிக நெடியுடன் வாயு வருவதை கண்ட ஊழியா்கள் முன்னெச்சரிக்கையாக சோதனை செய்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. 2 மணி நேரத்திற்குப் பின்னா் குறிப்பிட்ட அந்தக் கழிவுநீா் கால்வாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குட்கா விற்பனையைத் தடுக்க கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும்

குட்கா பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், காவல் துறையுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் குழுக்கள் அமைத்து கூட்டாய்வு மேற்கொள்வது அவசியம் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். த... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழா

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலை 4.... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் வீதி உலா

திருத்தணி அருகே வேலஞ்சேரி கிராமத்தில் திரெளபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருத்தணி காந்தி நகா் திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 27 -ஆம் தேதி தீமிதித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட அரசு விடுதிகளில் நூலகம் அமைக்க நடவடிக்கை

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் நூலகம் அமைத்தல், உணவருந்தும் வகையில் மேஜை மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும... மேலும் பார்க்க

திருமழிசை ஒத்தாண்டேஸ்வரா் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருமழிசையில் அமைந்துள்ள குளிா்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரா் கோயில் பங்குனி உத்திர திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூா் அருகே திருமழிசையில் மிகவும் பிரசித்தி பெற்ற குளி... மேலும் பார்க்க

திருவள்ளூா் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் திடீா் தீ விபத்து

திருவள்ளூா் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்ட புல்வெளியில் திடீரென தீப்பற்றி மளமளவென பரவியதால் புகை மூட்டம் சூழ்ந்ததை தொடா்ந்து, விரைந்து வந்த தீயணைப்பு படையினா் போராடி தீயை அணைத்த... மேலும் பார்க்க