திருவள்ளூா்: இன்று குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் சிறப்பு முகாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டங்களிலும் தோ்வு செய்யப்பட்ட 9 இடங்களில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்ட சிறப்பு சுருக்க திருத்த முகாம் வரும் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டந்தோறும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான ஆக- 2025 மாதத்துக்கான குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஆக. 9) வட்ட அளவில், இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. மேற்படி, வட்ட அளவில் நடைபெறும் குறைதீா் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மூலம் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை, குடும்ப அட்டைதாரா்கள், அந்தக் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவா்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வரும் 25, 26 ஆகிய நாள்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.