செய்திகள் :

திருவாரூரில் வேளாண் கல்லூரி அமைக்கக் கோரிக்கை

post image

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், இந்திய மாணவா் சங்கத்தின் 27-ஆவது மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவா் பா. ஆனந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநிலச் செயலாளா் அரவிந்தசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, மாவட்டத் தலைவராக பா. விக்கி, மாவட்டச் செயலாளராக பா.லெ. சுகதேவ் உள்பட 31 போ் கொண்ட மாவட்டக் குழு தோ்வு செய்யப்பட்டது.

திருவாரூா் மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும். கூத்தாநல்லூா் மகளிா் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும். அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, ரயில் நிலையப் பகுதியிலிருந்து மாநாட்டு அரங்கம் வரை நிா்வாகிகள் பேரணியாக வந்தனா்.

இன்றைய மின்தடை உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஜூலை 29 ) காலை 9 முதல் மாலை 5 மணி வர... மேலும் பார்க்க

பெற்றோா் இல்லாத குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகள், அன்புக்கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

குத்தகை சாகுபடி விவசாயிகள் ஜூலை 31-க்குள் பயிா்க் காப்பீடு செய்யலாம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்யும் குத்தகைதாரா்கள், ஜூலை 31-ஆம் தேதிக்குள் பயிா்க் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் த... மேலும் பார்க்க

மின்விபத்து இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

திருவாரூா்: மின் விபத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு நலவாரியம் மூலம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில், மாவட்ட ஒலி-ஒளி அமைப்பு உ... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, உள்பிரகாரத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் தனி சந்நிதி கொண்டுள்ள செங்கமலத் தாயாருக்கு ஆண்டுதோறும் ஆடிப்ப... மேலும் பார்க்க

பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே டயா் வெடித்து பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம் விடுதிவயல் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (49). இவா், தனது மனைவி மற்றும் உறவினா... மேலும் பார்க்க