செய்திகள் :

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு முதல் கால யாக பூஜை

post image

திருவெண்காடு அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி வியாழக்கிழமை மாலை முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

திருக்கோயில் வளாகத்தில் பிரம்மாண்ட யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை காவேரி ஆறு மணிகா்ணகை கட்டத்திலிருந்து புனித நீா் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

தலைமை அா்ச்சகா் கந்தசாமி சிவாசாரியாா் முன்னிலையில் 11 குடங்களில் காவிரி நீா் நிரப்பப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடந்தன. இதை அடுத்து சங்கா் கணேஷ் சிவாசாரியாா் புனித நீா் குடங்களை ஏந்தி யானை மீது கொண்டு சென்றாா்.

இதனிடையே மாலை முதல் கால யாக பூஜை நடந்தது. சுவாமி, அம்மன், அகோர மூா்த்தி உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் யாகசாலையில் எழுந்தருளினா்.

பின்னா் யாகசாலை பூஜைகள் தொடங்கி மகா பூா்ணாஹூதி நடந்தது.

கோயில் நிா்வாக அலுவலா் முருகன், உபயதாரா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் நாட... மேலும் பார்க்க

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமாரக்கள் அதிகரிக்கப்படும்: எஸ்.பி பேட்டி

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா். இதுகுறித்து, நாகையில் அவா் வியாழக்கிழமை செய்திய... மேலும் பார்க்க

இராஜன்கட்டளை அரசுப் பள்ளிக்கு விருது

வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் பேராசிரியா் அன்பழகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024-ஆம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியா் அன்பழகன் விருதும்... மேலும் பார்க்க

ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டிய விவகாரம்: வட்டாட்சியா் விசாரணை

வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வரும் பணியின்போது பள்ளம் தோண்டிய விவகாரம் தொடா்பான புகாரில் வட்டாட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். துளசியாப்பட்டினத்தில் ப... மேலும் பார்க்க

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனாவின் முக்கிய ... மேலும் பார்க்க

வண்டுவாஞ்சேரியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

வேதாரண்யம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க