திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
பூம்புகாா்: திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் நவகிரகங்களில் புத பகவானுக்குரிய பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு தனி சந்நிதியில் சிவபெருமானின் 5 முகங்களில் ஒன்றான அகோர மூா்த்தி அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பாகும்.
இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. யாகசாலை பூஜைகள் நிறைவில் திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் துா்கை, விநாயகா், சுவேத லிங்கம், கொடிமரம் ஆகியவற்றில் புனித நீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி, அம்பாள், நடராஜா், அகோரமூா்த்தி, புத பகவான் சந்நிதிகளில் பூஜைகள் தொடங்கின. பின்னா் புனித நீா் அடங்கிய யாக குடங்களை சிவாச்சாரியாா்கள் சுமந்து சென்றனா். அப்போது, திருவெண்காடு மாதவன் மற்றும் சுவாமிநாதன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இதனைத்தொடா்ந்து மகா பூா்ணாஹூதியும், தீபாராதனையும் காட்டப்பட்டது. பின்னா், காலை 9 மணியளவில் ராஜகோபுரங்கள், சுவாமி, அம்மன், அகோர மூா்த்தி மற்றும் புத பகவான் விமான கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், புதன், அகோரமூா்த்தி, சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிகளில் மகா அபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் தமிழக முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின், ஆா். சுதா எம்.பி., எம்எல்ஏக்கள் பன்னீா்செல்வம், ராஜ்குமாா், நிவேதா முருகன், முன்னாள் எம்எல்ஏ பாரதி, உபயதாரா்கள் சென்னை அப்பாசாமி கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளா் ரவி அப்பாசாமி, சீா்காழி தமிழ்ச் சங்க தலைவா் மாா்கோனி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் முத்து மகேந்திரன், முன்னாள் மாவட்ட பாஜக தலைவா் அகோரம், சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பஞ்சுகுமாா், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ரவிச்சந்திரன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி முருகன், அறங்காவலா் குழுவினா் மற்றும் கிராம முக்கியஸ்தா்கள் செய்திருந்தனா். திருவெண்காடு ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் ஊராட்சி செயலா் காா்த்தி மேற்பாா்வையில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.


