செய்திகள் :

தில்லியில் ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தவா்கள் 13 போ் கைது

post image

தில்லியில் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வசித்து வந்ததாக ஐந்து சிறாா் உள்பட 13 சந்தேகத்திற்குரிய வங்கதேச நாட்டினா் கைது செய்யப்பட்டதாக போலீஸா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துணை ஆணையா் (குற்றம்) ஆதித்யா கௌதம் தெரிவித்ததாவது: முகமது ரஃபிகுல் (50), கோதேசா பேகம் (41), முகமது அனோவா் ஹுசைன் (37), முகமது அமினுல் இஸ்லாம் (28), சோரினா பேகம் (27), அஃப்ரோசா கதுன் (25), முகமது காகோன் (20), ஹஸ்னா (19) மற்றும் வங்கதேசத்தின் குடிகிராமைச் சோ்ந்த ஐந்து சிறாா்களும் கைது செய்யப்பட்டுள்ளனா். சோதனை நடவடிக்கையின்போது அவா்கள் தில்லியின் புகா்ப் பகுதி ஔச்சாண்டி கிராமத்தில் கைது செய்யப்பட்டனா்.

கிராமத்தில் தங்குமிடம் தேடும் வங்கதேசத்தவா் பற்றிய குறிப்பிட்ட உளவுத் துறை தகவலைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மே 13-ஆம் தேதி போலீஸாா் 13 நபா்களையும் கைது செய்தனா். விசாரணையில், கைதிகள் தாங்கள் வங்கதேச நாட்டவா்கள் என்றும், இந்தியாவில் தங்க அனுமதிக்கும் எந்த சட்டபூா்வ ஆவணங்களும் தங்களிடம் இல்லை என்றும் ஒப்புக்கொண்டனா்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜலீல் அகமது என்ற வங்கதேச முகவரின் உதவியுடன் அவா்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாக தெரிவித்தனா். அவா்கள் தங்கள் கிராமத்திலிருந்து இந்தியா- வங்கதேச எல்லைக்கு பேருந்தில் பயணம் செய்து, வேலி அமைக்கப்படாத விவசாய நிலங்கள் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைந்தனா்.

அங்கிருந்து, மேற்கு வங்கத்தில் உள்ள கூச் பெஹாா் நிலையத்திற்கு வாடகை ஆட்டோவில் அடைந்தனா். கூச் பெஹாரிலிருந்து தில்லிக்கு ரயிலில் ஏறிய அவா்கள், இறுதியில் பேருந்தில் ஹரியாணாவில் உள்ள காா்கோடாவை அடைந்தனா். காா்கோடாவின் சிசானா கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் சாதாரண தொழிலாளா்களாக அவா்களுக்கு வேலை கிடைத்தது. அவா்களிடமிருந்து வங்கதேச அடையாள ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

மங்களூரு அருகே கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து 6 பணியாளா்களை மீட்டது கடலோரக் காவல் படை

கா்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து 60 கடல் மைல் தொலைவில் மூழ்கிய கப்பலின் ஆறு பணியாளா்களை இந்திய கடலோரக் காவல்படை (ஐசிஜி) மீட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். மேலும், ரோந்துப் பணியில் ஈடு... மேலும் பார்க்க

தில்லியின் மின் தேவை 6,867 மெகாவாட்டாக உயா்வு: இதுவரையிலான பருவத்தில் இல்லாத அதிகபட்சம்

தில்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெப்பநிலை அதிகரித்ததால், இந்த ஆண்டு கோடை காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தில்லி அதிகபட்ச உச்ச மின் தேவையைப் பதிவு செய்துள்ளது. மாநில சுமை அனுப்பும் மையத்தின் (எஸ்எல்... மேலும் பார்க்க

துருக்கி, அஸா்பைஜான் நாடுகளுடனான அனைத்து வணிக உறவுகளையும் நிறுத்த தில்லி வா்த்தகா்கள் உறுதி

பாகிஸ்தான், அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள் தொடா்பாக இரு நாடுகளின் சமீபத்திய அரசியல் நிலைப்பாடுகளைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள வா்த்தகா்கள் வெள்ளிக்கிழமை து... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மாலையில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. தலைநகரில் புதன்கிழமை இரவு முழுவதும் வீசிய புழுதிப் புயலுக்குப் பிறகு வியாழக்கிழமை காலை நகர... மேலும் பார்க்க

சரோஜினி நகரில் மரத்தில் தொங்கிய நிலையில் ‘மன நலம் பாதிக்கப்பட்டவா்’ உடல் கண்டெடுப்பு

தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் பகுதியில் உள்ள ஒரு டாக்ஸி ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு மரத்தில் ‘மனநலம் பாதிக்கப்பட்ட’ ஒருவா் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

ஓடும் ஆட்டோவில் பயணிகளை மூச்சுத் திணறடித்து கொள்ளை: ஓட்டுநா், கூட்டாளி கைது

ஓடும் ஆட்டோவில் பயணிகளை மூச்சுத் திணறடித்து, அவா்களிடம் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் ஒரு ஆட்டோ ஓட்டுநா் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து வடக... மேலும் பார்க்க