செய்திகள் :

தில்லியில் ஓரிரு நாள்களில் பருவமழை தொடங்க வாய்ப்பு!

post image

தில்லியில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட ஓரிரு நாள்களில் முன்னதாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளம், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், தில்லியில் ஓரிரு நாள்களில் பருவமழை தொடங்கும் என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது,

ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர் மற்றும் தில்லியின் பல பகுதிகளில் இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை பொழிய வாய்ப்புள்ளதாகவும். தலைநகரில் பெரும்பாலும் நாளை பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுவாக, தென்மேற்கு பருவமழை ஜூன் 30 ஆம் தேதிக்குள் தில்லியை வந்தடைகிறது. இருப்பினும், ஜூன் 24 ஆம் தேதி முன்கூட்டியே பருவமழை தொடங்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 2013ல் ஜூன் 16 ஆம் தேதி தலைநகரில் பருவமழை பெய்தது. கடந்தாண்டு ஜூன் 28-ம், 2023 ஜூன் 25-ம், 2022 ஜூன் 30ம், 2021 ஜூலை 13ல் பருவமழை தில்லியை அடைந்தது.

அடுத்த சில நாள்களுக்கு வானம் மேகமூட்டமாகவும், லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை, மின்னல் எதிர்பார்க்கப்படும் என்றும் ஐஎம்டி கணித்துள்ளது.

தில்லியில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இதுவரை, தில்லியில் 2.4 மி.மீட்டருக்கும் அதிகமான மழையுடன் மூன்று மழை நாள்கள் பதிவாகியுள்ளன.

தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் தில்லியில் வழக்கமான மழைப்பொழிவு சுமார் 43.3 மி.மீ. ஆகும். இருப்பினும் இதுவரை 89 மிமீ மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ளது.

தலைநகரில் கடந்த ஆண்டு ஜூன் 28ல் பருவமழை தொங்கியது, ஜூன் மாதத்தில் 74.1 மிமீ வழக்கமான மழையை விட 243.4 மிமீ அதிகமாகப் பெய்தது. சஃப்தர்ஜங்கில் மட்டும் 228.1 மிமீ மழையைப் பதிவு செய்துள்ளதாக ஐஎம்டி தரவுகள் தெரிவிக்கின்றன.

ஈரான் போரால் பாஸ்மதி அரிசிக்கு வந்த சோதனை!

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போரின் காரணமாக ஈரானுக்கு ஏற்றுமதியாக வேண்டிய ஒரு லட்சம் டன் பாஸ்மதி அரிசி துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளன.இந்தியாவில் உற்பத்தியாகும் பாஸ்மதி அரிசியில் 18% - 20% ஈரானுக்கு ஏற்ற... மேலும் பார்க்க

மே.வங்கம்: இடைத்தேர்தலில் பாஜக தோல்வி! ஆளும் திரிணமூல் காங். பெருவெற்றி!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கலிகஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஆலிஃபா அஹமது வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, இதே தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு பொதுத... மேலும் பார்க்க

ஈரானுடன் போர்: இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக 160 இந்தியர்கள் தாயகம் வருகை!

ஈரான் - இஸ்ரேல் இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலில் இருந்து முதல்கட்டமாக 160 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் ஜோர்டான் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். போர் எ... மேலும் பார்க்க

விண்வெளி நாயகியாகும் ஆந்திர இளம்பெண்: சர்வதேச விண்வெளி வீராங்கனையாகத் தேர்வு!

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான பொறியியல் பட்டதாரி ’ஜானவி தங்கேட்டி’ அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘டைட்டான் ஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்(டிஎஸ்ஐ) மேற்கொண்டுவரும் விண்வெளி திட்டத்த... மேலும் பார்க்க

எதிர்க்கட்சியைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்: கார்கே!

பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளைக் குறைத்து மதிப்பிட்டால் மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். கார்கே ராய்ச்சூரில் கார்கே பல்வேறு திட... மேலும் பார்க்க

ரயிலில் இருக்கை தர மறுத்த பயணியை சரமாரியாக தாக்கிய பாஜக எம்எல்ஏ ஆதரவாளர்கள்!

தில்லி - போபால் வந்தே பாரத் ரயிலில் ஒரு பயணியை அதே ரயிலில் பயணித்த பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லி - போபால் இடையேயான வந்தே பாரத் ரய... மேலும் பார்க்க