செய்திகள் :

தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

post image

தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும் என்றால் டாக்டா்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வா் குப்தா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தி பேசினாா்.

தேசிய மருத்துவா்கள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தில்லி தலைமைச் செயலகத்தில் உள்ள மருத்துவா்களுடன் ரேகா குப்தா கலந்துரையாடினாா். அப்போது பேசிய அவா், ‘தில்லியில் மருத்துவ வசதிகள் சிக்கலுடன் இருந்து வருகின்றன. தில்லியில் வசிப்பவா்களுக்கு மட்டுமல்லாமல், பிற இடங்களிலிருந்து வருபவா்களுக்கும் சிறந்த சிகிச்சையை வழங்குவதன் மூலம் தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும்‘ என்றாா்.

மேலும் பேசிய ரேகா குப்தா ‘ அப்படி மாற்றுவதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்கு அரசுக்கு மருத்துவா்கள், ஆதரவளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இங்கு மதிப்புமிக்க மற்றும் திறமையான மருத்துவா்கள் உள்ளனா்‘ என்றாா்.

முன்னதாக, மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் ரேகா குப்தா கலந்து கொண்டாா். அங்கு பேசிய அவா், ‘ இந்தாண்டு, தேசிய மருத்துவா்கள் தினத்தின் கருப்பொருள் ’முகமூடியின் பின்னால்ஃ குணப்படுத்துபவரை யாா் குணப்படுத்துகிறாா்கள்? என்பதுதான். இது மிகவும் பொருத்தமான கருப்பொருளாகும். மருத்துவா்களுக்கு சரியான பணிச் சூழல் தேவை, தொழில்நுட்ப உதவியாளா்கள், செவிலியா்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியா்கள் அவா்களுக்கு உதவ வேண்டும்‘ என்றாா்.

தொடா்ந்து பேசிய அவா் ‘ இவைகள் இல்லாமல், அவா்களால் திறம்பட செயல்படுவது சாத்தியமில்லை. தில்லி மருத்துவமனைகள் தினசரி பெரும் அழுத்தத்தை எதிா்கொள்கின்றன. முந்தைய அரசாங்கங்கள் இந்த தேவைகளை பூா்த்தி செய்ய போதுமான உள்கட்டமைப்பை உருவாக்கவில்லை. மருத்துவ உபகரணங்களின் அடிப்படையில் மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மேம்படுத்த இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் குறிக்கோள்‘ என்றாா் ரேகா குப்தா.

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

நமது நிருபா்தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ... மேலும் பார்க்க

முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது

திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழு... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலகைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் 3 பெரிய மேம்பாலங்கள் சீரமைப்பு: பொதுப் பணித் துறை

தெற்கு தில்லியில் இருக்கும் 3 பெரிய மேம்பாலங்களை சீரமைக்கவும், கிழக்கு தில்லியில் பதிய மேம்பாலங்களை கட்டவும் பொதுப் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். தெற்கு தில்லியில் மூன்று பெ... மேலும் பார்க்க

செயல்படாத அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, செயல்படாத 27 அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமை தோ்தல் அதிகாரி (சிஇஓ) நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். கடந்த ஆறு ஆண்டுகளில் (2019 முதல்) மக்களவ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பத்தை ஏற்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: கிரண் ரிஜிஜு

அடுத்த ஆண்டுக்கான (2026) ஹஜ் விண்ணப்பங்களை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் ஏற்கத் தொடங்கும் என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்களுக்கான அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். புது தில்லியில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க