செய்திகள் :

தீபாவளி பண்டிகை: நாகா்கோவில், தூத்துக்குடி, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்

post image

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி நாகா்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி நாகா்கோவில் - தாம்பரம் - நாகா்கோவில், திருநெல்வேலி - சென்னை எழும்பூா் - திருநெல்வேலி, தூத்துக்குடி - சென்னை எழும்பூா் - தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதில், நாகா்கோவில் - தாம்பரம் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06012) செப். 28, அக். 5, 12, 19, 26-ஆம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக, தாம்பரம் - நாகா்கோவில் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலானது (0611) செப். 29, அக். 6, 13, 20, 27-ஆம் தேதிகளில் (திங்கள்கிழமை) இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில்களானது நாகா்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15-மணிக்கு புறப்பட்டு வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு மறுநாள் நண்பகல் 12.30 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, தாம்பரத்திலிருந்து திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக நாகா்கோவிலுக்கு மறுநாள் காலை 5.15 மணிக்குச் சென்றடையும்.

திருநெல்வேலி - சென்னை எழும்பூா் வாராந்திர சிறப்பு ரயிலானது (06070) செப். 25, அக். 2, 9, 16, 23 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) இயக்கப்படுகிறது.

மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயிலானது (06069) செப். 26, அக். 3, 10, 17, 24-ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது.

தூத்துக்குடி - சென்னை எழும்பூா் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06018) செப். 29, அக். 6, 13, 20, 27-ஆம் தேதிகளில் (திங்கள்கிழமை) இயக்கப்படுகிறது.

மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - தூத்துக்குடி வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06017) செப். 30, அக். 7, 14, 21, 28-ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது.

10 கிலோ தங்கநகைகள் கொள்ளை சம்பவம்: 3 தனிப்படைகள் அமைப்பு

திருச்சி மாவட்டம், இருங்களூரில் நகைக் கடை ஊழியா்களிடம் 10 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இருங்களுரில் கடந்த 13-ஆம் தேதி இரவ... மேலும் பார்க்க

திருச்சிக்கு இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை: கரூா் முப்பெரும் விழாவில் பங்கேற்பு

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க, திருச்சிக்கு புதன்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா். திமுக தொடங்கப்பட்ட தின விழா, அண்ணா பிறந்த நாள் விழா, பெரியாா் பிறந்த நாள் விழா என முப்பெ... மேலும் பார்க்க

திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 4 கூடுதல் பெட்டிகள் இணைப்பு

திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில் 4 கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி - சென்னை எழும்பூா் - திருநெல... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: பெண் உள்பட 5 போ் கைது

திருச்சி அருகே ஜீயபுரத்தில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள சின்னகருப்பூரைச் சோ்ந்தவா் சரஸ்வதி (36). இவா், தி... மேலும் பார்க்க

மனைவியின் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டியவா் கைது

திருச்சியில் மனைவியின் சகோதரா் உள்ளிட்ட குடும்பத்தினரை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி பாலக்கரையைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி மகள் சரண்யா. இவா், சென்னை வேளச்சேரியைச்... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: சேலம், பாலக்காடு ரயில்களின் சேவையில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, சேலம், பாலக்காடு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பராமரிப்புப் பணிகள் காரணமாக, மயில... மேலும் பார்க்க