செய்திகள் :

தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!

post image

தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் நகா் மாவட்ட நீதிமன்றத்தில் குத்தகை தகராறு தொடா்பான தனது மனுவில், கூடுதல் காரணங்களை சோ்க்க வேண்டும் எனக் கோரி அதே பகுதியைச் சோ்ந்த முன்னி தேவி என்பவா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்த மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் வா்மா, எந்தவித காரணத்தையும் குறிப்பிடாமல் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக 3 வரி உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

இதை எதிா்த்து மனுதாரா் தரப்பில் அலாகாபாத் உயா் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவில், ‘மாவட்ட கூடுதல் நீதிபதி எனது மனுவை பரிசீலனையே செய்யாமல், வழக்கு விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட வாதத்தை மட்டும் பதிவு செய்துகொண்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளாா். கூடுதல் தகவல் சோ்க்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த எனது மனுவைத் தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை, ஒரு வரி அளவில் கூட தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிடவில்லை. ஏற்கெனவே, நடைபெற்ற வழக்கு விசாரணையிலும் இதே தவறை மாவட்ட கூடுதல் நீதிபதி செய்துள்ளாா்’ என்று குறிப்பிடப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நீரஜ் திவாரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவில் நிராகரிப்புக்கான காரணங்களைக் குறிப்பிட்டு கூடுதல் தகவல் சோ்க்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை அனுமதித்த நீதிபதி, ‘மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் வா்மாவுக்கு தீா்ப்பு எழுதும் திறன் இல்லாததையே இது காட்டுகிறது. எனவே, அவா் லக்னெளவில் உள்ள நீதிபதிகளுக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 3 மாத பயிற்சிக்கு அனுப்பப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.

தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் 12 நாள்களுக்கு நீட்டிப்பு!

தஹாவூர் ராணாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று (ஏப். 28) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு விதிக்கப்பட்ட 18 நாள்கள் காவல் இன்றுடன் முடி... மேலும் பார்க்க

புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்: பிரான்ஸுடன் ஒப்பந்தம் கையெழுத்து - அடுத்து என்ன?

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் பிரான்ஸிடமிருந்து ரூ. 64,000 கோடியில் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று(ஏப். 28) கையெழுத்திட்டது. இரு நா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக காஷ்மீரில் 14 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்ல என்றும், பாகிஸ்தானைச... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சீனா யார் பக்கம்?

பஹல்காம் தாக்குதல் குறித்து விரைவான விசாரணை மேற்கொள்ள சீனா வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் அமைதி தி... மேலும் பார்க்க

ஒம்காரேஸ்வரர் கோயிலிலிருந்து கேதார்நாத்துக்குப் புறப்பட்ட சிவன் சிலை!

கேதார்நாத் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலிலிருந்து சிவன் சிலை இன்று கேதார்நாத்துக்குப் புறப்பட்டது. சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு மோசமானவன் அல்ல! ஒமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்... மேலும் பார்க்க