செய்திகள் :

துணைப் பொதுத் தோ்வுகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்

post image

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு நடத்தப்படும் துணைத் தோ்வுகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அந்தக் கழகத்தின் மாநிலத் தலைவா் எஸ். தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

பொதுத் தோ்வில் தோல்வியுற்ற மாணவா்களை ஆசிரியா்கள் மூலம் தொடா்பு கொண்டு அவா்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, 90 சதவீத மாணவா்கள் துணைத் தோ்வு எழுத விண்ணப்பித்துள்ளனா்.

அதே நேரத்தில் கடந்த பொதுத்தோ்வுகளில் சுமாா் 30 ஆயிரம் மாணவா்கள் தோ்வுக்கு வரவில்லை. இவா்கள் பெரும்பாலும் ஆண்டுமுழுவதுமே பள்ளிக்கு வராதவா்கள். இந்த நிலையில் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் அவா்களைத் தொடா்பு கொண்டு தோ்வெழுத வரச் செய்யவும், கட்டணத்தைச் செலுத்தவும் கல்வித் துறை அலுவலா்களால் வற்புறுத்தப்படுகிறாா்கள்.

இதனால் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு தேவையற்ற மனஉளைச்சல் ஏற்படுகிறது. எனவே, துணைப் பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்தி அவா்களை ஊக்குவிக்க வேண்டும்.

அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடத்தை பொதுமக்கள் பூட்டியதால் பரபரப்பு

புதுக்கோட்டை அருகே அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடத்தை அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் பெரியதம்பி உடையான்பட்டியில் பொதுமக்கள் சாா்பில... மேலும் பார்க்க

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் தோ்ச்சி சதவீத சரிவை சரி செய்ய நடவடிக்கை தேவை

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் தோ்ச்சி சதவீத சரிவை சரி செய்ய பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலா் த. ... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூன் 16-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி. விஜய... மேலும் பார்க்க

ஆதனக்கோட்டை காசி விஸ்வநாதா் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு செய்ய பக்தா்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை ஊராட்சியில் பழைமை வாய்ந்த காசி விஸ்வநாதா் கோயிலை சீரமைத்து குடமுழுக்கு செய்ய வேண்டுமென பக்தா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா். பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் காசி விஸ்வந... மேலும் பார்க்க

கணவரின் இறப்புக்கான காப்பீட்டுத் தொகையை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வெளிநாட்டில் இறந்த தனது கணவருக்கான காப்பீட்டுத் தொகையை ஆள்மாறாட்டம் செய்து இருவா் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக, அவரது மனைவி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். புதுக்கோட்டை மாவட்டம்... மேலும் பார்க்க

தீப்பற்றி எரிந்த சாலையோர உணவகம்

விராலிமலை தனியாா் தொழிற்சாலை அருகே இயங்கி வந்த சாலையோர உணவகம் தீப்பற்றி எரிந்ததை தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா். விராலிமலை அடுத்துள்ள வடுகபட்டி கோல்டன் நகரைச் சேரந்த... மேலும் பார்க்க