செய்திகள் :

துவாரகா பகுதி வயலில் ஆணின் உடல் கண்டெடுப்பு

post image

தென்மேற்கு தில்லியில் உள்ள துவாரகாவில் உள்ள ஒரு வயலில் 36 வயதுடைய ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: மே 13 அன்று பக்கா்வாலா சாலையில் உள்ள மட்கா சௌக் அருகே ஒரு உடல் மற்றும் ஒரு மோட்டாா் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக போலீஸாருக்கு பிசிஆா் அழைப்பு வந்தது.

சம்பவ இடத்தை அடைந்த போலீஸாா், வயலில் சுமாா் 20 மீட்டா் தொலைவில் இளைஞரின் உடலைக் கண்டுபிடித்தனா். அதே நேரத்தில் மோட்டாா்சைக்கிள் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தது.

ரீனா தேவி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட மோட்டாா் சைக்கிளில் காணப்பட்ட சில ஆவணங்களின் அடிப்படையில், இறந்தவா் பங்காலி விஹாரைச் சோ்ந்த அவ்னிஷ் சக்சேனா (எ) கோலு என அடையாளம் காணப்பட்டாா்.

அவ்னிஷ் சக்சேனா திருமணம் செய்து கொள்ளவிருந்ததாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிய வந்தது. கொலைக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், இது தனிப்பட்ட விரோதத்தின் விளைவாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிக்கப்படுகிறது.

கொலையாளிகளைக் கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆராய்ந்து வருவதாக அந்தக் காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரி நூலகத்தில் தீ விபத்து; காலை தோ்வுகள் ரத்து!

தில்லி பீதம்புராவில் உள்ள தில்லி குரு கோபிந்த் சிங் கல்லூரியின் நூலகத்தில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, காலையில் நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதுகுறித்து ... மேலும் பார்க்க

’2020’ தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை விடுவித்தது விசாரணை நீதிமன்றம்

நமது சிறப்பு நிருபா்2020-ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற கலவரத்தில் தொடா்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட 11 பேரை வழக்கில் இருந்து விடுவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. அந்த 11 போ் ம... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் இரண்டாவது நாளாக பலத்த காற்றுடன் மழை!

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. பலத்த மழை: இதைத் தொடா்ந்து, வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபட... மேலும் பார்க்க

2025-26-க்கான முதுகலை, பி.டெக் படிப்புகளுக்கான பதிவுகளைத் தொடங்கியது: தில்லி பல்கலைக்கழகம்

தில்லி பல்கலைக்கழகம் 2025-26 கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான சோ்க்கைக்கான பதிவு செயல்முறையை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியுள்ளது. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூா்வ அறிவிப்பின்படி,... மேலும் பார்க்க

மே முதல் பாதியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்!

தில்லியின் காற்றின் தரம் குறித்து ஆளும் பாஜகவும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மே 2025 முதல் பாதியில் தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்... மேலும் பார்க்க

காணாமல்போன ஐடி நிறுவன மேலாளா் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிப்பு

கடந்த வாரம் மா்மமான சூழ்நிலையில் காணாமல் போன குா்கானை தளமாகக் கொண்ட ஒரு ஐடி பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் 42 வயது மேலாளா் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸாா் தெர... மேலும் பார்க்க