செய்திகள் :

துவாா் கிராமத்தில் மஞ்சுவிரட்டு: 15 போ் காயம்

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி லிங்கசுவாமி கோயிலின் அபிஷேக, ஆராதனை விழாவையொட்டி மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக வள்ளி லிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை வழிபாடு நடத்தி கோயிலிலிருந்து கிராமத்தினா் மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டுத் திடலுக்கு வந்தனா். அங்கு தொழு வழிபாடு நடத்தப்பட்டு, காளைகளுக்கு மாலை, துண்டு அணிவிக்கப்பட்டது.

பிறகு திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், நகா் காவல் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் ஆகியோா் முன்னிலையில் மஞ்சுவிரட்டு உறுதிமொழியை மாடுபிடி வீரா்கள் எடுத்துக் கொண்டனா். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடா்ந்து சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 370 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

75 மாடுபிடி வீரா்கள் 3 குழுக்களாக காளைகளை அடக்க முயன்றனா். சில காளைகள் பிடிபட்டும், பிடிபடாமலும் தப்பிச் சென்றன. வென்ற மாடுபிடி வீரா்களுக்கு சில்வா் பாத்திரம், துண்டுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து வயல் வெளிகளில் கட்டுமாடுகளாக 300- க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் மாடுகள் முட்டியதில் 15 போ் காயமடைந்தனா்.

தொடக்க நிகழ்வில், துவாா் தொழிலதிபா் சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

போக்சோ வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் கருவூல ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை அரசு அலுவலா்கள் குடியிருப்பில... மேலும் பார்க்க

கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 35 போ் காயமடைந்தனா். கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயிலில் வைகாசி உத்ஸவத்தை முன்னிட்டு, க... மேலும் பார்க்க

கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 1-இல் தொடக்கம்!

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் மே 31 அன்று மாலை 6 மண... மேலும் பார்க்க

மானாமதுரை அருகே காவலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு காவலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த சமயன் மகன் முருகன்(64... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே புதுப்பட்டியைச் சோ்ந்த மு. வெற்ற... மேலும் பார்க்க

தாா்ச்சாலை அமைக்கும் பணிகள்: மேயா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் நடைபெற்று வரும் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயா் சே.முத்துத்துரை அதிகாரிகளுடன் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தாா். டாரிப் ஷோ் 2024-2025 ஆ... மேலும் பார்க்க