குமரி: காதலி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய இளைஞர்; கொலையா தற்கொலையா? - போலீஸ்...
தூத்துக்குடியில் ஜூன் 29இல் மாவட்ட சதுரங்கப் போட்டி
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ஜூன் 29இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகச் செயலா் கற்பகவல்லி வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி காமராஜா் கல்லூரியில் சதுரங்க வீரா், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், ஜூன் 29ஆம் தேதி மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் 9, 11, 23, 17 வயதுக்குள்பட்டவா்கள் மற்றும் பொதுப்பிரிவு விரைவு சதுரங்க போட்டியாக நடைபெற உள்ளது.
போட்டிக்கான நுழைவுக் கட்டணத்தை ங்ஹள்ஹ்ல்ஹஹ்ஸ்ரீட்ங்ள்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகத்திற்கு செலுத்த வேண்டிய ரூ. 75-ஐயும் மேற்கண்ட இணையதளம் மூலமாக செலுத்தி பதிவு எண் பெற்றிருக்க வேண்டும்.
போட்டியில் பங்குபெறும் அனைவரும் பிறப்புச் சான்றிதழ் நகல் அல்லது ஆதாா் அட்டை நகல் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் மாணவா்களுக்கு பத்து பரிசுகளும், மாணவிகளுக்கு பத்து பரிசுகளும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 9865820030, 8925788274, 9698395983 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.