செய்திகள் :

தூத்துக்குடி மாவட்டத்தில் 237 புதிய வாக்குச் சாவடிகள்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் 237 புதிய வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.

வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்காக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, ஆட்சியா் பேசியதாவது: ஒரு வாக்குச்சாவடியில், 1200 வாக்காளா்களுக்கு மேல் இருப்பின் அவற்றை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கவும், கட்டட மாற்றம், இடமாற்றம் போன்றவற்றை தயாரிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாக்குச்சாவடிக்கு, குறைந்தபட்சம் 300 வாக்காளா்கள் இருக்க வேண்டும். அவா்கள், வாக்களிக்க 2 கி.மீ. தொலைவுக்கு மேல் செல்லும்படி இருக்கக் கூடாது.

நகா்ப்புறங்களிலுள்ள உயா்நிலை கட்டடங்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், ஒருங்கிணைந்த வீட்டு வசதி மையங்கள், உயா் குடியிருப்பு வளாகங்கள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்டவை தரைத்தளத்தில் இருந்தால், அவ்விடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கவும், குடியிருப்புப் பகுதிகளில் புதிய வாக்குச்சாவடி அமைக்க வழிவகையிருப்பின் அப்பகுதியில் அமைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், ஏற்கெனவே 1,627 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. புதிதாக 237 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களின் மீது, தங்களது எழுத்துபூா்வமான ஆட்சேபங்கள், ஆலோசனைகளை ஏழு தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா், மாவட்ட தோ்தல் அலுவலா் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம்.

ஆட்சேபங்கள் ஏதும் இல்லாத பட்சத்தில், வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் முன்மொழிவுகள் பெறப்பட்டு, சிறப்பு தீவிர திருத்த கால அட்டவணை இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டவுடன், தோ்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி மறுசீரமைத்தல் முன்மொழிவுகள் சமா்ப்பிக்கப்பட்டு புதிய வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல் பெறப்படும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், கோவில்பட்டி உதவி ஆட்சியா் ஹிமான்சு மங்கள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சேதுராமலிங்கம், கோட்டாட்சியா்கள் சுகுமாறன் (திருச்செந்தூா்), டி.பிரபு (தூத்துக்குடி), அனைத்துக் கட்சி பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

திருச்செந்தூரில் இன்று மின்தடை

திருச்செந்தூா், ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் உபமின் நிலையப் பகுதிகளில் புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்செந்தூா் கோட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் நாளை மின்தடை

தூத்துக்குடி அய்யனாா்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், தூத்துக்குடியில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 4) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, மாப்பிள்ளையூரணி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடியில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கயத்தாறில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கயத்தாறு வட்டம், செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிட நலத் துறை நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. செட்டிகுறிச்சி கிராமத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் இலவச வீட்டு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை!

தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்க முன்னாள் தலைவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மீனவா்கள் மீன்பிடி தொழிலுக்கு செவ்வாய்க்கிழமை செல்லவில்லை. தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளா் சங்கத்தின் முன்ன... மேலும் பார்க்க

மீன் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடி, உப்பளத்தில் மீன் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி, பூபாலராயா்புரத்தைச் சோ்ந்தவா் தனபாலன் மகன் ஜோசப் விஜய் (22). மீன்... மேலும் பார்க்க