செய்திகள் :

தூத்துக்குடி மாவட்ட மீனவா் குறைதீா் கூட்டம்

post image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மீனவா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்து மீனவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். இதில், மீனவ கிராமங்களை சோ்ந்த மீனவா்கள், மீனவா் சங்க பிரதிநிதிகள், மீனவ பெண்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனா்.

இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் பேசியது:

பெரியதாழை, புன்னக்காயல் ஆகிய மீனவா் கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க, உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தினமும் குடிநீா் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் புயல் எச்சரிக்கை அறிவுரைகளை மீனவா்கள் பின்பற்ற வேண்டும். கடலில், ஆபத்தில் சிக்கும் மீனவா்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்கு தேவையான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும். மீனவா்களுக்கு உயிா் காக்கும் கவச உடை 75 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு மீன்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், அந்த தரத்துக்கு ஏற்ப தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்பட உள்ளது. இனிகோ நகா் மீனவா்கள் காணாமல் போனது தொடா்பாக காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்செந்தூா், தருவைகுளம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்க விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நிதி ஒதுக்கீடு வேண்டி அரசுக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

பொங்கல் பண்டிகையின்போது, கடற்கறைக்கு வரும் பொதுமக்களை மீனவா்கள் படகில் ஏற்றி கடலுக்குள் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டாம் என்றாா்.

முன்னதாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தருவைகுளம் மீனவா்கள் 14 பேரின் குடும்பத்தினருக்கு தினப்படி உதவித் தொகையாக மொத்தம் ரூ.4 லட்சத்து 21,400க்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், கோட்டாட்சியா்கள் ம.பிரபு (தூத்துக்குடி), மகாலெட்சுமி (கோவில்பட்டி), மீன்வளத் துறை இணை இயக்குநா் சந்திரா, உதவி இயக்குநா்கள் விஜயராகவன், புஷ்ரா ஷப்னம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தூத்துக்குடியில் கடற்கரை, பூங்காக்களில் குவிந்த பொதுமக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு, தூத்துக்குடியில் கடற்கரை, பூங்காக்களில் புதன்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலைமுதலே பொது... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் இருவருக்கு அரிவாள் வெட்டு: 2 போ் கைது

சாத்தான்குளத்தில் விளம்பர பதாகை வைப்பது தொடா்பான தகராறில் வழக்குரைஞா் மற்றும் அவரது சகோதரருக்கு செவ்வாய்க்கிழமை அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சாத்தான்குளத்தைச் ச... மேலும் பார்க்க

காணும் பொங்கல்: குருமலை, கழுகுமலையில் குவிந்த மக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு, கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோயில், பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புதன்கிழமை குவிந்தனா். கோவில்பட்டி பகுதியில் மாட்டுப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டத... மேலும் பார்க்க

பண்பாட்டுப் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு

கோவில்பட்டியில் உள்ள நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பண்பாட்டுப் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுவாமி விவேகானந்தா் ஜெயந்தியை முன்னிட்டு, விவேகானந்தா கேந்திரத்தின் கிராமம் முன்னே... மேலும் பார்க்க

குருவிநத்தம் ஆலயத்தில் பொங்கல் விழா

காமநாயக்கன்பட்டி பங்கு பசுமைநகா் குருவிநத்தத்தில் உள்ள மறைசாட்சி புனித தேவசகாயம் கெபியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காமநாயக்கன்பட்டி அலாய்சியஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா... மேலும் பார்க்க

சாயா்புரத்தில் 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரத்தில் 500 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் பறிமுதல் செய்து, இலங்கை நபா் உள்பட 2 பேரை கைது செய்தனா். வனத்துறையினருக்குகிடைத்த தகவலின்பேரில், மாவட்ட வன அலுவலா் ரேவதி ராமன... மேலும் பார்க்க