செய்திகள் :

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: 'அமைச்சர் சேகர் பாபுவுடன் பேச விருப்பமில்லை' - போராட்டக் குழுவினர்

post image

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நேற்று நள்ளிரவில் நடந்த சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு அமைச்சருடன் பேச விருப்பம் இல்லை என்றும், அதிகாரிகளுடன் பேசவே விரும்புவதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

போராடும் மக்கள்
போராடும் மக்கள்

அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, துணை மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் போராட்டக் குழுவுடன் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இரண்டரை மணி நேரத்துக்கு மேல் நீண்ட இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்த அமைச்சர் சேகர் பாபு கடுமையாகவும் பேசியிருந்தார். 'பணி நிரந்தரம் தரோம்னு நாங்க எதுவும் வாக்குறுதி கொடுக்கவில்லையே...' எனப் பேசியிருந்தார்.

அமைச்சரின் இந்த ஸ்டேட்மெண்ட்டும் பேச்சுவார்த்தை அறைக்குள் அவர் பேசிய சில விஷயங்களும் போராட்டக்குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியது.

சேகர் பாபு
சேகர் பாபு

சங்கடம் ஏற்படுவதை தவிர்க்க விரும்புகிறோம்

இன்று மதியம் 2 மணிக்கு மேல் அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த போராட்டக் குழுவினர், 'அரசுத் தரப்பு அவர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைகளுன் பலன் தருமா எனத் தெரியவில்லை. ஒருவேளை திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த நினைத்தால் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதே நல்லது. அமைச்சருக்கு எங்களின் நன்றியையும், பரஸ்பரம் சங்கடம் ஏற்படுவதை நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம் என்பதையும் தெரியப்படுத்துங்கள்.' எனக் கூறியிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`ஸ்டாலின் நடத்தியது மேஜிக் ஷோ, எடப்பாடியார் நடத்தியது ரியல் ஷோ' - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

"ஸ்டாலின் நடத்திய ரோடு ஷோ மேஜிக் ஷோ, ஆனால், எடப்பாடியார் நடத்திய ரோடு ஷோ ரியல் ஷோ" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார்மதுரை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த... மேலும் பார்க்க

CM ஸ்டாலினையே திட்டுவீங்களா? - டென்ஷனான சேகர் பாபு; பின்வாங்காத தூய்மைப் பணியாளர்கள்! - Spot Report

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் மண்டலங்களை தனியார்மயப்படுத்தக் கூடாது என்பதும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுமே இவர்களின் கோரிக்கை. இ... மேலும் பார்க்க

Vijay-க்கு EPS தூது? பிரேக் போடும் Seeman! | Elangovan Explains

'மதுரை மாநாட்டில் மாஸ் காட்ட வேண்டும்' என திட்டமிட்டு செயல்படுகிறார் விஜய். இதற்கு பின்னணியில் மெகா கூட்டணி கணக்கு உள்ளது. முக்கியமாக 'எடப்பாடி மற்றும் பன்னீர்' இருவரின் மகன்களும் தனித்தனியே விஜய்-இடம... மேலும் பார்க்க

அரசுத்திட்ட விழா; அழைப்பு விடுக்காத இந்தியன் வங்கித் தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானம்

மதுரையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்காத இந்தியன் வங்கித் தலைவர் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மான... மேலும் பார்க்க

'கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ - கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை

அப்செட்டாக மண்டலங்கள் 5 மற்றும் 6 யை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 10 வது நாளை எட்டியிருக்கிற... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை!" - தொல்.திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"தம... மேலும் பார்க்க