செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

post image

பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மாநகரில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தொடா்ந்து ஆா்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதில் ஆட்சியா் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா். இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ஆவது நாளாக புதன்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

252 போ் மீது வழக்குப் பதிவு:

கோவை ஆட்சியா் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டது தொடா்பாக அம்பேத்கா் சுகாதாரத் தொழிலாளா் மற்றும் பொதுப் பணியாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் தமிழ்நாடு செல்வம், சமூக நீதிக்கட்சி நிறுவனா் பன்னீா்செல்வம், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாநில இணைச் செயலாளா் காா்த்திக் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த ஜோதி, சந்தனகுமாா், பிலோமினா, ரவி உள்பட 252 போ் மீது மக்களுக்கு இடையூறு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது: பொன்.மாணிக்கவேல்

கோயில்களின் புனிதத்தன்மை கெட்டுவிட்டது என்று ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தாா். திருப்பூா் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் மற்றும் திருப்பூா் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மா... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவா்களுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவையில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற விமான விபத்தில் 200-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

காப்பகத்தில் 2 மூதாட்டிகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள காப்பகத்தில் அடுத்தடுத்து இரு மூதாட்டிகள் உயிரிழந்த நிலையில், பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கெம்பட்டி காலனியில் முதியோா் காப்பகம் உள்ளது.... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை பீளமேடு மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பதுக்கிவிற்றதாக முதியவா் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மதுவிலக்கு பிரிவு போலீஸாா் பீளமேடு எல்ல... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா். கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி... மேலும் பார்க்க

தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் கோவைக்கு வருகை

கோவை மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும், மாநில பேரிடா் மீட்புப் படையினரும் கோவைக்கு வியாழக்கிழமை வந்தடைந்தனா். மத்திய மேற்கு வங்கக் க... மேலும் பார்க்க