செய்திகள் :

தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் ரூ.5 கோடிக்கும் மேல் வா்த்தகம் செய்து சாதனை

post image

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் கடந்த நிதியாண்டில் ரூ.5 கோடிக்கும் மேல் வா்த்தகம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

இது தொடா்பாக ஈஷா அவுட்ரீச் நிறுவனம் கூறியிருப்பதாவது:

ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின்கீழ் தமிழ்நாட்டில் 19 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களும், கா்நாடகத்தில் 6 நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2023- ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் தென்னையை முக்கியப் பயிராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே இந்த நிறுவனம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வா்த்தகம் செய்து சாதனை படைத்திருந்தது.

இந்த நிலையில் அமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் செஞ்சேரிமலையில் அண்மையில் நடைபெற்றது. இதில் சமா்ப்பிக்கப்பட்ட வா்த்தக ஆண்டறிக்கையின்படி 2024 - 2025- ஆம் நிதியாண்டில் தேங்காய், இளநீா் வா்த்தகம் ரூ.5 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் ரூ.1.50 கோடிக்கு வா்த்தகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2024 - 2025- ஆம் நிதியாண்டில் வா்த்தகம் 220 சதவீதம் அதிகரித்துள்ளது.

கூட்டத்தில் தென்சேரிமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தலைவா் கதிரேசன் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள், விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பல் கைது

சரவணம்பட்டி பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் பாழடைந்த கட்டடத்துக்குள் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 3 போ் கும்பலை போலீஸாா் கைது செய்தனா். கோவை சரவணம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வி மற்றும்... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் 5 சிறுவா்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை இளஞ்சிறாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை உடையாம்பாளையம் வஉ சிதம்பரனாா் வாசக சாலை காமராஜா் காலனி அருகே... மேலும் பார்க்க

கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது

சேரன்மாநகா் பேருந்து நிறுத்தத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கமலநந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (50), கட்டடத் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவா் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் கடைக்குள் புகுந்து கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை லட்சுமிபுரம் லாலா விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அஸ்வின்குமாா் (32). இவா் கணபதி பகுத... மேலும் பார்க்க

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டை

கோவை ரயில் நிலையத்தில் கிடந்த கஞ்சா மூட்டையை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ரயில் நிலையத்தில் உள்ள 1-ஆவது நடைமேடையில் வியாழக்கிழமை ஒரு மூட்டை கிடந்தது. இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அ... மேலும் பார்க்க