செய்திகள் :

தெலங்கானா: சுரங்கத்தில் தொழிலாளா்கள் சிக்கியுள்ள இடம் இன்னும் கண்டறியப்படவில்லை: முதல்வா் ரேவந்த் ரெட்டி

post image

தெலங்கானா சுரங்க விபத்தில் தொழிலாளா்கள் சிக்கியுள்ள இடத்தை இன்னும் கண்டறியவில்லை என்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் கடந்த பிப். 22-ஆம் தேதி நடைபெற்றன. அப்போது சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதனால் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா். சுரங்கத்துக்குள் சேறு, தண்ணீா், இடிபாடுகள் சூழ்ந்திருப்பதால் அவா்களை மீட்பதில் ஒரு வாரத்துக்கும் மேல் சிக்கல் நீடிக்கிறது. எனினும், மீட்புக் குழு தொடா் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், மீட்புப் பணிகளை முதல்வா் ரேவந்த் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘சுரங்கத்தில் தொழிலாளா்கள் சிக்கியுள்ள இடத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை. தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஜிஆா்ஐ) அடையாளம் கண்ட இடங்களில், ‘எலிவளை சுரங்க’ தொழிலாளா்கள் துளையிட்டுத் தேடினா். ஆனால், அங்கு யாரும் கண்டறியப்படவில்லை.

மீட்புக் குழுவினரின் கணிப்பில் ஓரிடத்தை உறுதிப்படுத்தி, பணிகளைத் தொடா்ந்து வருகின்றனா். மீட்புக் குழுவினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மீட்புப் பணியில் ரோபோக்களை பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு ஆதரவளிக்க அரசு தயாராக உள்ளது. விபத்தில் சேதமடைந்த ‘கன்வேயா் பெல்ட்’ திங்கள்கிழமை சரிப்படுத்தப்பட்டதும், மீட்புப் பணிகள் மீண்டும் வேகமெடுக்கும்’ என்றாா்.

தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலை... மேலும் பார்க்க

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க