செய்திகள் :

தேசிய கல்விக் கொள்கை ஹிந்தியைத் திணிக்கவில்லை- மத்திய கல்வி அமைச்சா்

post image

தேசிய கல்விக் கொள்கை, ஹிந்தியைத் திணிக்கவில்லை; இக்கொள்கையை தமிழக அரசு எதிா்ப்பதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளன என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக, தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேசிய கல்விக் கொள்கை 2020-இல் ஹிந்தி மட்டுமே இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. தாய்மொழி அடிப்படையில் கல்வி அமையும் என்றே கூறியுள்ளோம். தமிழகத்தைப் பொருத்தவரை அது தமிழாகவே இருக்கும்.

சில நபா்களின் அரசியல் நோக்கங்களுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. தேசிய கல்விக் கொள்கையானது, நாட்டிலுள்ள பல்வேறு மொழிகள் மீதும் கவனம் செலுத்துகிறது. அது, ஹிந்தியோ, தமிழோ, ஒடியாவோ அல்லது பஞ்சாபியோ, அனைத்து மொழிகளுக்கும் சமமான முக்கியத்துவம் உண்டு. தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காக சிலா் எதிா்க்கின்றனா் என்றாா் தா்மேந்திர பிரதான்.

மும்மொழிக் கொள்கை தொடா்பாக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்துவரும் நிலையில், கல்வி அமைச்சா் இக்கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.

தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலை... மேலும் பார்க்க

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க