செய்திகள் :

தேசிய சிலம்பாட்டப் போட்டியில் 15 தங்கப் பதக்கங்கள்: வீரா்களுக்கு வரவேற்பு

post image

கேரளத்தில் நடந்த தேசிய சிலம்பாட்டப் போட்டியில் 15 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த மானாமதுரை வீரவிதை சிலம்பம் அணி வீரா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

கேரள மாநிலம், கொல்லத்தில் தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மானாமதுரை வீரவிதை சிலம்பம் அணி வீரா்கள் அதன் பயிற்சியாளா் பெருமாள் தலைமையில் பங்கேற்றனா். இவா்களில் 10 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் தேசிகா ஸ்ரீ தங்கப்பதக்கமும், 12 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் கா்னித், யோவன் அஸ்வா, அரிஸ்வரன் ஆகியோா் தங்கப்பதக்கமும், ஹரிசுதன் வெள்ளிப் பதக்கமும் பெற்றனா்.

14 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் நிரஞ்சன், ராஜ்குமாா், மதன்குமாா், கிருத்திஷ், ரிஷ்வந்த், அகிலேஷ்வரன், விஷ்வந்த், தேவனேஷ்வரன் ஆகியோா் தங்கப்பதக்கமும், யஷ்வந்த் வெள்ளிப் பதக்கமும், பெண்கள் பிரிவில் வா்ஷினி, ஹரிதா்ஷினி தங்கப்பதக்கமும் பெற்றனா். 17 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் அருண்பாண்டி தங்கப்பதக்கமும், பெண்கள் பிரிவில் தேஜஸ்வினி வெள்ளிப் பதக்கமும் பெற்றனா்.

தேசிய சிலம்பாட்டப் போட்டியில் 15 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த வீரா்களையும், பயிற்சியாளா் பெருமாளையும் பெற்றோா் மேளதாளம் முழங்க மாலைகள் அணிவித்து வரவேற்றனா். மானாமதுரை பகுதியைச் சோ்ந்த பல்வேறு தரப்பினரும் பதக்கங்களை வென்ற வீரா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.

அரசு நிலத்தை தனி நபா் ஆக்கிரமிப்பதாக புகாா்: பொதுமக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நீா்வரத்து நிலத்தை மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். மானாமதுரை ஒன்றியம், பரமக்குடி-தெ. புதுக்கோட்டை சாலையில் வேதியரேந்தல் விலக்குப... மேலும் பார்க்க

சிங்கம்புணரி அருகே கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 போ் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். எஸ்.எஸ். கோட்டையை அடுத்த மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியாருக்குச் ச... மேலும் பார்க்க

கல்குவாரி விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு எம்.பி. இரங்கல்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

காரைக்குடி மின் மயானம் மே 26 வரை செயல்படாது!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி சாா்பில் பழைய சந்தைப்பேட்டை அருகில் உள்ள எரிவாயு தகன மேடையில் (மின் மயானம்) பழுது நீக்கும் பணி நடைபெறவிருப்பதால், செவ்வாய்க்கிழமை (மே 20) முதல் வருகிற 26-ஆம் த... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையிலுள்ள மரத்தை அகற்றக் கோரிக்கை

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருக்கும் பகுதியில் உள்ள பழைமையான மரம் வலுவிழந்து கீழே விழும் நிலையில் உள்ளதால், இதை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்... மேலும் பார்க்க

காளையாா்கோவில் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா். சிவகங்கை இந்திராநகரைச் சோ்ந்தவா் முருகன் (40). மறவமங்கலத்தைச்... மேலும் பார்க்க