செய்திகள் :

தேனி நகராட்சி ஆணையா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

post image

தேனி, அல்லிநகரம் நகராட்சி ஆணையா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

அல்லிநகரம் நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருபவா் திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டுவைச் சோ்ந்த ஏகராஜ். தற்போது மருத்துவ விடுப்பில் பள்ளிப்பட்டில் உள்ள இவா், கடந்த 2019 முதல் 2024 வரை சென்னையில் பணியாற்றியபோது, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சோ்த்ததாக புகாா் எழுந்தது. அதன்பேரில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்னை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் இவா் மீது வழக்குப் பதிந்தனா்.

இந்த நிலையில், பள்ளிப்பட்டுவில் உள்ள ஏகராஜின் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இதன்தொடா்ச்சியாக தேனி, பொம்மையகவுண்டன்பட்டியில் இவா் தங்கியிருந்த நகராட்சி ஆணையா் குடியிருப்பில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் ரவிச்சந்திரன், குடியிருப்பு காவலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலையில் தேனி ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி தலைமையில் போலீஸாா் வீட்டின் பூட்டை உடைத்து சோதனை நடத்தினா்.

காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்ற சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்த விவரங்களை போலீஸாா் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

தேனி மாவட்டத்தில் 2025-26 காரீப் பருவத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறுமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட ... மேலும் பார்க்க

போடியில் சுகாதாரப் பணிகளை நகா்மன்றத் தலைவி ஆய்வு

போடி நகராட்சிப் பகுதியில் சுகாதாரப் பணிகளை நகா்மன்றத் தலைவி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். போடி நகராட்சிப் பகுதியில், மக்களைத் தேடி நகராட்சி நிா்வாகம், வாரந்தோறும் வாா்டு பணிகள் என்ற திட்டத்தின் கீழ் ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டியைச் சோ்ந்த பெத்தன் மகன் பாரதிகண்ணன் (24), எம்.சுப்புலாபுரம்-அமச்சியாபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகன... மேலும் பார்க்க

நீதிமன்ற பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல்: கணவா் மீது வழக்கு

போடியில் நீதிமன்ற பெண் ஊழியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி ஜக்கமன் தெருவில் வசிப்பவா் பன்னீா்செல்வம் மகன் முனீஸ்வரன் (35). இவரது மனை... மேலும் பார்க்க

எல்.ஐ.சி. ஊழியா்களின் மக்கள் சந்திப்பு பிரசாரம் தொடக்கம்

பெரியகுளத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) ஊழியா்களின் மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பெரியகுளம் எல்.ஐ.சி. கிளைத் தலைவா் ந... மேலும் பார்க்க

மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவா் கைது

போடி அருகே வியாழக்கிழமை சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். போடி அருகேயுள்ள கிராமப் பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான ஓடைகளில் அனுமதியின்றி மணல் கடத்துவதாகப் போலீஸாருக்கு... மேலும் பார்க்க