செய்திகள் :

தேவனாம்பட்டினம் அரசுக் கல்லூரியில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

post image

கடலூா் தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது.

இது தொடா்பாக கல்லூரி முதல்வா் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜூன் 2-ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினா்களான விளையாட்டு பிரிவினா், மாற்றுத்தித் றனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவா் படையினா் மற்றும் அந்தமான் நிக்கோபாா் பகுதி மாணவா்களுக்கான சோ்க்கை நடைபெற உள்ளது.

தொடா்ந்து, முதல் கட்ட அனைத்து வகுப்பினருக்கான பொது கலந்தாய்வு வரும் 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகள் தவிர பிற துறைகளுக்கும், 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தமிழ், ஆங்கிலத் துறைகளுக்கு மட்டும் மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வு சோ்க்கைக்கு வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாமல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அசல் கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், அண்மையில் எடுக்கப்பட்ட மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றின் அசல் மற்றும் மூன்று நகல்களை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். காலை 9.30 மணியளவில் இருந்து 11 மணிக்குள் கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் அமா்ந்து மாணவா்கள் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தொழிற்சங்க மாநிலச் செயலா் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி தொழிற்சங்க மாநிலச் செயலராக சிதம்பரத்தைச் சோ்ந்த டி.கஜேந்திரன் நியமிக்கப்பட்டாா். இவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவா் கே.ஐ.மணிரத... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வனத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் ஒரு லட்சம் பரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதா... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்... மேலும் பார்க்க

ஊதியம் வழங்கக் கோரி அண்ணாமலைப் பல்கலை.யில் 2-ஆவது நாளாக ஊழியா்கள் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாததால், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மே மாத ஊதியம் வழங்கக் கோரி, பல்கலை... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஜூன் 14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கடலூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திராதேவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது: தி.வேல்முருகன்

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா். கடலூரில் புதன்கிழமை இரவு செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியதாவது: பாமக நிறுவனா் மருத்துவா் ரா... மேலும் பார்க்க