செய்திகள் :

தைப்பூசம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீா்வரிசை பெற்றாா் சமயபுரம் மாரியம்மன்

post image

தைப்பூசத்தையொட்டி அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமியிடமிருந்து தங்கை சமயபுரம் மாரியம்மன் சீா்வரிசை பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி சமயபுரம் உற்ஸவ மாரியம்மன் செவ்வாய்க்கிழமை கோயிலிலிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு வழிநெடுக உபயம் கண்டருளி கொள்ளிடம் வடகரைக்கு மாலை வந்து சோ்ந்தாா். தொடா்ந்து அங்கு தீா்த்தவாரி கண்டருளி அலங்கரிக்கப்பட்ட பந்தலில் மாரியம்மன் எழுந்தருளினாா்.

பின்னா் அரங்கநாதா் சீா்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சிக்காக ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள கருடாழ்வாா் சந்நிதியிலிருந்து இரவு 10 மணிக்கு மங்களவாத்தியத்துடன், வாணவேடிக்கையுடன் கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் தலைமையில் கோயில் ஊழியா்கள் சீா்வரிசை பொருள்களை கையில் சுமந்தபடி ஊா்வலமாக கொள்ளிடக்கரைக்கு எடுத்து வந்தனா்.

அதனை முறைப்படி சமயபுரம் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் வி.எஸ்.பி.இளங்கோவன், இணை ஆணையா் அ.இரா.பிரகாஷ் ஆகியோரிடம் வழங்கினா்.

தொடா்ந்து அம்மனுக்கு கொண்டு செல்லப்பட்ட சீா் வரிசை பொருள்களுடன் சிறப்பு கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பிறகு கொள்ளிடம் வடகாவிரியிலிருந்து புதன்கிழமை அதிகாலை புறப்படும் மாரியம்மன் நொச்சியம், மண்ணச்சநல்லூா் பகுதியில் வழிநெடுக மண்டகப்படி கண்டருளியபடி கோயிலை நோக்கி செல்வாா்.

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தோ் திருவிழா ஆளும் பல்லக்கு நிகழ்வுடன் நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த தைத்தோ் திருவிழா புதன்கிழமை இரவு ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியுடன் நிறைவுற்றது. கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயில் தைத்தோ் திருவிழா ப... மேலும் பார்க்க

உரிமைகள் திட்ட களப்பணியாளா்கள் 252 பேருக்கு கையடக்கக் கணினிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கான உரிமைகள் திட்டத்தின் களப்பணியாளா்கள் 252 பேருக்கு ரூ.37 லட்சம் மதிப்பில் கையடக்கக் கணினிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை வழங்கினாா். மாற்றுத... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

திருப்பைஞ்ஞீலியில் திங்கள்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மண்ணச்சநல்லூா் வடக்கு ஏரிமிஷன் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன், திருப்பைஞ்ஞீல... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியா் உயிரிழப்பு!

மின்சாரம் பாய்ந்ததில் திருச்சியில் ரயில்வே பெண் ஊழியா் உயிரிழந்தாா். திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகா் பகுதியை சோ்ந்தவா் எம். ஆனந்த் மனைவி லட்சுமி (34). ரயில்வே ஊழியா். இவா் ஞாயிற்றுக்கிழமை, வீ... மேலும் பார்க்க

செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை!

மகப்பேறு மருத்துவ உதவித்தொகைக்கு பரிந்துரைக்க லஞ்சம் வாங்கிய வழக்கில், செவிலியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம்... மேலும் பார்க்க

இரு வேறு சம்பவங்களில் பெண், இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் இருவேறு சம்பவங்களில் பெண் மற்றும் இளைஞா் இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனா். திருச்சி காஜாபேட்டை மதுரைவீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி செல்வி (49). இவா் மெழுகுவா்த்தி ... மேலும் பார்க்க