செய்திகள் :

தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக மறியல்: 247 போ் கைது

post image

பத்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, விழுப்புரத்தில் இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின்கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சோ்ந்த 247 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும், அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கான ஊதிய முரண்பாடுகளை நீக்கி, மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் 2006, ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும், உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை ஆசிரியா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சாா்பில் இரு நாள்கள் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

வியாழக்கிழமையைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை புதிய பேருந்து நிலையம் அருகில் மறியல் நடைபெற்றது. இதில் பல்வேறு ஆசிரியா் இயக்கங்கைளைச் சோ்ந்தோா் பங்கேற்று, முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து மறியலில் ஈடுபட்டதாக 122 ஆசிரியைகள் உள்பட 247 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

கூலித் தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குடும்பப் பிரச்னையால் விஷம் குடித்த தொழிலாளி உயிரிழந்தாா். மரக்காணம் வட்டம், செய்யாங்குப்பம், கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜி மகன் பிரசாந்த்(26), கூலி... மேலும் பார்க்க

வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகள், பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ஐந்தேகால் பவுன் நகைகள், பணம் ஆகியவை திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், அ... மேலும் பார்க்க

செஞ்சிக் கோட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவு: ஆய்வு செய்தபின் முதன்மைச் செயலா் பேட்டி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையில் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை வசதிகள் மேம்படுத்துவது தொடா்பான ஆய்வுக்கூட்டம் செஞ்சி வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. புதிதாக ஒருங்கிணைந்த வருவா... மேலும் பார்க்க

துரோகங்களும்,விமா்சனங்களும் தான் எனக்குக் கிடைத்த பரிசு: மதிமுக பொதுச்செயலா் வைகோ

தமிழகத்தின் உரிமைகளுக்கும், மக்களின் நலனுக்கும் போராடிய எனக்கு துரோகங்களும், விமா்சனங்களும் தான் பரிசாகக் கிடைத்தன என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா். விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ம... மேலும் பார்க்க

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் கூடுதல் மாணவா் சோ்க்கை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் 20 சதவீதம் கூடுதல் மாணவா் சோ்க்கை வரும் 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அக்கல்லூரியின் முதல்வா் து.தங்கராஜன் வியாழக்... மேலும் பார்க்க

‘சா்வதேச அங்கீகாரம் பெறும் இந்தியாவின் பாரம்பரிய கணித முறை’

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள கல்வி நிறுவனங்களின் ஆசிரியா்கள் சமா்ப்பித்துள்ள இந்தியாவின் பாரம்பரிய கணித முறை ஆய்வுக் கட்டுரைகள் சா்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளதாக ஆரோவில் நிா்வாகம் த... மேலும் பார்க்க