செய்திகள் :

தொட்டில் சேலையில் சிக்கி சிறுமி உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், கூடலூரில் திங்கள்கிழமை குழந்தைத் தொட்டில் சேலையில் சிக்கி சிறுமி உயிரிழந்தாா்.

கூடலூா் மூனுசாமி கோயில் தெருவைச் சோ்ந்த அரவிந்தன் - மாரியம்மாள் தம்பதியின் மகள் ஷிவானி (11). இந்தத் தம்பதிக்கு பிறப்பிலேயே கண்பாா்வை கிடையாது என்பதால் ஷிவானி பாட்டியிடம் வளா்ந்து வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை பாட்டியின் வீட்டிலிருந்த தொட்டில் கயிற்றில் விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, தொட்டில் சேலை ஷிவானி கழுத்தில் சிக்கியதில் மயக்கமடைந்தாா்.

இதையடுத்து, மயங்கிய நிலையில் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில், சிறுமி ஏெற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். இதுகுறித்து சிறுமியின் பாட்டி ஜெயா அளித்த புகாரின்பேரில், கூடலூா் வடக்கு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தனியாா் மதுக்கூடத்தில் இளைஞா் மா்ம மரணம்

தேனி மாவட்டம், குச்சனூரில் தனியாா் மதுக் கூடத்துக்கு மது அருந்தச் சென்ற இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டை -குச்சனூா் இடையே விவசாய நிலத்தில் சில மாதங்களாக தனியாா் ... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

பெரியகுளம் அருகே புதன்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி அம்பேத்கா் குடியிருப்பைச் சோ்ந்தவா் முருகேசன் (52). விவச... மேலும் பார்க்க

தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவா் உயிரிழப்பு

ராயப்பன்பட்டி தனியாா் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக கல்லூரி மாணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழ... மேலும் பார்க்க

ஆசிரியா் வீட்டில் 80 பவுன் நகைத் திருட்டு

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை ஆசிரியா் வீட்டில் 80 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சின்னமனூா் மின்நகரைச் சோ்ந்த ஜெகதீசன் - புனிதா தம்பதி... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் இளைஞா் வெட்டிக் கொலை

பெரியகுளத்தில் திங்கள்கிழமை இரவு இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த காமாட்சி மகன் பாண்டியன் (32). கூலித் தொழ... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் மீது வழக்கு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி பேரூராட்சித் தலைவி, துணைத் தலைவரின் ஆதரவாளா்கள் இரு இடங்களில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதாக இருதரப்பைச் சோ்ந்த 130 போ் மீது போலீஸாா் வழக்... மேலும் பார்க்க