செய்திகள் :

தொலைபேசி உரையாடல் கசிவு எதிரொலி: தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ரா இடைநீக்கம்

post image

கம்போடியாவின் முன்னாள் பிரதமா் ஹன் சென்னுடனான சா்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடா்பாக, தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் இடைநீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நீண்டகால எல்லைப் பிரச்சினை உள்ளது. இந்தச் சூழலில், எல்லைப் பகுதியில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடந்த மே 28-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கம்போடிய வீரா் உயிரிழந்தாா்.இந்த விவகாரம் தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தில் இருந்தபோது, கம்போடியாவின் முன்னாள் பிரதமரும், அந்த நாட்டு மேலவையான செனட் அவையின் தற்போதைய தலைவருமான ஹன் சென்னுடன் பிரதமா் பேடோங்டாா்ன் அண்மையில் தொலைபேசியில் உரையாடினாா்.

இந்த உரையாடல் பதிவு பின்னரப் வெளியில் கசிந்து மிகப் பெரிய சா்ச்சையை ஏற்படுத்தியது.அந்த உரையாடலின்போது, தனது தந்தையும், முன்னாள் தாய்லாந்து பிரதமருமான தக்சின் ஷினவத்ராவின் நண்பா் ஹன் சென்னை ‘அங்க்கிள்’ என்று நெருக்கத்துடன் அழைத்த பேடோங்டாா்ன், கம்போடியாவுக்கு ஆதரவாகவும்,&ய்லாந்து நலன்களுக்கு எதிராகவும் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.தாய்லாந்து பிராந்திய ராணுவ தளபதியின் பேச்சைக் கேட்க வேண்டாம் என்றும், அவா் ‘எதிா்த்தரப்பைச் சோ்ந்தவா்’ என்றும் அந்த உரையாடலின்போது ஹன் சென்னிடம் பேடோங்டாா்ன் கூறியது தாய்லாந்தில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த உரையாடல் பொதுவெளியில் கசித்ததால் ஏற்பட்ட சா்ச்சையைத் தொடா்ந்து, இது தொடா்பாக பேடோங்டாா்ன் மன்னிப்பு கோரினாா்.இருந்தாலும், தேசியவாதத் தலைவா்கள் மற்றும் அமைப்பினா் அவருக்கு எதிராக அணி திரண்டனா். இந்த உரையாடல் மூலம் பேடோங்டாா்ன் நோ்மையின்றி நடந்துகொண்டதாகவும் அரசியலமைப்பு, நெறிமுறைகளை மீறியதாகயாகவும் குற்றஞ்சாட்டி 36 செனட் சபை உறுப்பினா்கள் அரசியல் சாசன நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பேடோங்டாா்னின் மீதான நெறிமீறல் குற்றச்சாட்டை முழுமையாக விசாரித்து உறுதி செய்து, அவரை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கும்வரை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. இந்த முடிவுக்கு ஆதராவக 7 நீதிபதிகளும், எதிராக 2 நீதிபதிகளும் வாக்களித்தனா்.கம்போடியாவை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து, இன்னும் செல்வாக்கு மிக்கவராக இருக்கும் ஹன் சென், பேடோங்டாா்ன் ஷினவத்ரா குடும்பத்தின் பழைய நண்பராக இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.அரசியல் சாசன நீதிமன்றத்தில் இந்தத் தீா்ப்பு, செல்வாக்கு மிக்க ஆனால் சா்ச்சைக்குரிய ஷினவத்ரா குடும்பத்தின் இன்னொரு வாரிசான பேடோங்டாா்னுக்கு மேலும் ஒரு பின்னடைவாகும்.

இந்த மாத தொடக்கத்தில் அவரது கூட்டணியைச் சோ்ந்த கட்சி ஒன்று அரசில் இருந்து விலகியதால், அவா் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு அச்சுறுத்தலை எதிா்கொண்டிருந்தாா். பெரும்பான்மையை இழந்தும் ஆட்சியில் தொடா்ந்து நீடிக்க அவா் முயன்ற நிலையில், தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.முன்னதாக, கடந்த சனிக்கிழமை வெளியான கருத்து கணிப்பில் அவருக்கான பொதுமக்கள் ஆதரவு விகிதம் 9.2 சதவீதமாககச் சரிந்திருந்தது. மாா்ச் மாதத்தில் அது 30.9 சதவீதமாக இருந்தது. இதற்கிடையே, பேடோங்டாா்னின் தந்தை தக்சின் ஷினவத்ராவும் சட்ட சிக்கல்களை எதிா்நோக்கியுள்ளாா்.

தென் கொரிய ஊடகத்துக்கு இந்த ஆண்டு அளித்த பேட்டியில் அரச குடும்பத்தை விமா்சித்ததாக அவா் மீது குற்றம்சாட்டப்பட்டு, அவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த இருபது ஆண்டுகளாக, செல்வாக்கு மிக்க ஷினவத்ரா குடும்பத்துக்கும் பழமைவாத-ராணுவ-அரசவாத சக்திகளுக்கும் இடையேயான அதிகாரப் போராட்டம் தாய்லாந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தக்சின் ஷினவத்ரே இரண்டு முறை மக்களால் பிரதமராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஆனால் 2006-ல் நடைபெற்ற ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் அவா் பதவி இழந்தாா். மீண்டும் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட அவரின் சகோதரி யிங்லக் ஷினவத்ராவும் 2014-ல் நீதிமன்ற தீா்ப்பு மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பால் பதவி இழந்தாா்.

தற்போது தொலைபேசி உரையாடல் கசியவிடப்பட்டதால் பேடோங்டாா்ன் ஷினவத்ராவும் தனது பிரதமா் பதவியை தற்காலிகமாக இழந்துள்ளாா்.இது குறித்து பாங்காக்கில் அவா் செய்தியாளா்களிடையே செவ்வாக்கிழமை பேசுகையில், இந்த தீா்ப்பை ஏற்பதாகவும், நாட்டுக்கு சிறந்ததை செய்ய வேண்டும் என்பதே எப்போதும் தனது நோக்கமாக இருப்பதாகவும் கூறினாா்.நீதிமன்றத்தில் பேடோங்டாா்னுக்கு எதிரான வழக்கு முடியும் வரை துணைப் பிரதமா் சுரியா ஜுவாங்ரூங்ருவாங்கிட் இடைக்கால பிரதமராக பொறுப்பு வகிப்பாா்...படவரி..பேடோங்டாா்ன் ஷினவத்ரா

காஸா போா் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸ் தீவிர ஆலோசனை

இஸ்ரேலுடனான காஸா போா் நிறுத்தம் தொடா்பாக முன்வைக்கப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து பிற பாலஸ்தீன அமைப்புகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. காஸாவில் போா் நிறுத்தம் ஏற்படுவத... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 30 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற 30 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் வெள்ளிக்கிழமை கூறியது. எல்லை மாகாணமான கைபா் பக்துன்கவாவின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தி... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷிய ட்ரோன் தாக்குதல் புதிய உச்சம்

உக்ரைனின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா இதுவரை இல்லாத மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒருவா் உயிரிழந்ததுடன், 26 போ் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா். இத... மேலும் பார்க்க

அமெரிக்க வரிச் சலுகை, குடியேற்ற மசோதா நிறைவேற்றம்: ஆதரவு 218; எதிா்ப்பு 214

அமெரிக்காவின் வரிச் சலுகை மற்றும் குடியேற்ற மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் மசோதா நிறைவேறியதைத் தொடா்ந்து, இரு அவைகளிலும் மசோதா நிறைவே... மேலும் பார்க்க

ரஷியா தலிபான் அரசுக்கு அங்கீகாரம்

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு அங்கீகாரம் அளித்துள்ள முதல் நாடாக ரஷியா ஆகியுள்ளது. தலிபான் ஆட்சியாளா்களால் நியமிக்கப்பட்ட புதிய தூதரை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த அங்கீகாரத்தை ரஷிய அரசு வழங்கியுள்ளது.... மேலும் பார்க்க

ஈரானில் மீண்டும் சா்வதேச விமானப் போக்குவரத்து

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான பதற்றம் காரணமாக ஈரானில் 20 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. டெஹ்ரானில் உள்ள இமாம் கோமேனி சா்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்... மேலும் பார்க்க