செய்திகள் :

தொழிலாளி அடித்துக் கொலை; 4 இளைஞா்கள் கைது! விபத்தில் பலியானதாகக் கூறியது அம்பலம்!

post image

விராலிமலை அருகே திங்கள்கிழமை இரவு விபத்தில் தொழிலாளி உயிரிழந்ததாக கூறிய சம்பவத்தில் பாதை பிரச்னையில் அவரை அடித்துக் கொன்ற 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விராலிமலையை அடுத்துள்ள துலுக்கம்பட்டியை சோ்ந்தவா் பாலுச்சாமி (51). தொழிலாளி. இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த செல்வம் என்பவருக்கும் பாதை பிரச்னையில் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற பாலுச்சாமி கீரனூா்- விராலிமலை சாலை முல்லையூா் அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்விடத்துக்குச் சென்ற விராலிமலை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மேலும், தனது தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக பாலுச்சாமி மகள் செல்வி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அதே ஊரைச் சோ்ந்த விக்கி(31) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், முல்லையூா் அருகே திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த பாலுச்சாமி மீது சரக்கு ஆட்டோவை மோதியதாகவும், தொடா்ந்து கம்பியால் தாக்கி கொலை செய்ததாகவும் விக்கி தெரிவித்துள்ளாா். மேலும், இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தது போல பாலுச்சாமியின் வாகனத்தின் கண்ணாடியை உடைத்துபோட்டுவிட்டு, வாகனத்தை சாலையில் தேய்த்து விட்டுச் சென்ாகவும் கூறியுள்ளாா்.

இதையடுத்து விக்கி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பா்கள் மூா்த்தி(20), எட்வின்(26), மாரிமுத்து(20) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்து புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனா்.

நிகழாண்டில் 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு: புதுகை ஆட்சியா் தகவல்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழாண்டின் காரீப் பருவத்தில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, அவற்றின் மூலம் 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பொன்னமராவதி வட்டாரத்தில் பரவலாக மழை

பொன்னமராவதி வட்டாரத்தில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். பொன்னமராவதி வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் சுட்டெரித்தது. இந்நிலையில் புதன்கிழமை பிற... மேலும் பார்க்க

அனுமதியில்லாத நிறுவனங்களிடமிருந்து உரங்களைக் கொள்முதல் செய்யக் கூடாது!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியில்லாத நிறுவனங்களிடமிருந்து உரங்களைக் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என வேளாண்மை இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி எச்சரிக்கைவிடுத்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

கறம்பக்குடி அருகே குடிநீா் வழங்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து நூதனப் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குடிநீா் வழங்காத ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து குடிநீா் குழாய், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் புதன்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட... மேலும் பார்க்க

ஆதனப்பட்டியில் திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனப்பட்டியில் சோழா் காலத்தைச் சோ்ந்த திருநாமத்துக்காணி கல்வெட்டுடன் நான்முக சூலக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இலுப்பூா் வட்டம், மருதம்பட்டி ஊராட்சி எல்லைக்குள்பட்ட ஆதனப்பட்டி வ... மேலும் பார்க்க

புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (செப். 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா். புதுக்கோட்டை ஒன்றியத்தில் பெ... மேலும் பார்க்க