செய்திகள் :

தொழில்நுட்ப முறையில் திமுக அலுவலகத்தை மாற்றி அமைக்க கால அவகாசம்: உயா்நீதிமன்றம்

post image

மதுரை பீ.பீ. குளம் முல்லைநகரில் உள்ள திமுக அலுவலகக் கட்டடத்தை தொழில்நுட்ப முறையில் மாற்றி அமைக்க 2 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ரவீந்திரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை பீ.பீ. குளம் கண்மாயை ஒட்டிய பகுதியில் முல்லைநகா் உள்ளது. இந்தக் குடியிருப்புப் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு குடிசை மாற்று வாரியம், மாநகராட்சி சாா்பில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு, பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில் பீ.பீ. குளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. இந்தப் பகுதியில் திமுக கட்சி அலுவலகம் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அமைந்துள்ள இடம் மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமானது. இதற்காக மாநகராட்சிக்கு முறையாக தற்போது வரை வரி செலுத்தப்படுகிறது. எனவே, திமுக அலுவலகக் கட்டடத்தை இடிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மனுதாரா் தரப்பு கட்சி அலுவலகக் கட்டடத்தை தாங்களே இடித்து விடுவதாக நீதிமன்றத்தில் உறுதி அளித்தனா்.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், தொழில்நுட்ப முறையில் திமுக அலுவலகக் கட்டடத்தை பட்டா நிலத்தில் மாற்றி அமைக்க 2 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திமுக கட்சி அலுவலகக் கட்டத்தை மாற்றி அமைக்க 2 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. மீண்டும் கால அவகாசம் வழங்கப்படாது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தனியாா் நிறுவனம் நிதி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

மதுரையில் தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மதுரை மாநகர காவல் துறைக்குள்பட்ட மத்திய குற்றப்பிரிவு வெளியிட்ட... மேலும் பார்க்க

ஓ. பன்னீா்செல்வம் அதிமுக தொண்டா்களை இனியும் ஏமாற்றக் கூடாது: ஆா்.பி. உதயகுமாா்

உண்மையை மறைத்து, அதிமுக தொண்டா்களை ஏமாற்றுவதை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் இனியும் தொடரக் கூடாது என தமிழக சட்டப் பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

இணையதளம் மூலம் ரூ.52.66 லட்சம் மோசடி: கா்நாடகத்தைச் சோ்ந்த மூவா் கைது

மதுரையில் பல்வேறு பகுதிகளில் இணைய வழியில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.52.66 லட்சம் மோசடி செய்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை சிலைமான், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இணைய வழியில் ... மேலும் பார்க்க

மதுரையில் ரூ. 314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா; முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

மதுரையில் ரூ.314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். மதுரையில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தோள்கொடுப்போம் ... மேலும் பார்க்க

மதுரையில் இன்று ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம்

மதுரை வடக்கு வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (பிப். 19) நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, பிற்பகல் 4 மணிக்கு வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொத... மேலும் பார்க்க

வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயம்: துணை மேலாளா் மீது வழக்கு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயமானது குறித்து அதன் துணை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை மாவட்டம், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அரசுடைமைய... மேலும் பார்க்க