செய்திகள் :

தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!

post image

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ. 720.98 லட்சம் பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் பயனடையும் வகையில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் வெங்காய விதைகள், காய்கனி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்காக நீா் சேகரிப்பு அமைப்பு, வீரிய ரக காய்கனி சாகுபடியை ஊக்குவிக்க நிழல் வலைக்குடில் உள்ளிட்டவை 50 சகவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

தேனீப் பெட்டிகள், தேனீக்கள் மற்றும் தேன் எடுப்பதற்கான உபகரணங்களும் மானியத்தில் வழங்கப்படுகிறது. சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் 25 மெட்ரிக் டன் கொண்ட சேமிப்புக் கிடங்கு அமைக்க 50 சதவீதம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

இத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்துக்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம்-2, வங்கி கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் ஜூலை 31 ஆம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூரில் ரூ. 7,616 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு

பெரம்பலூா் மாவட்டத்தில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கு ரூ. 7,616.17 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா். பெரம்பலூா் மாவட்டத்தில் இயங்கிவரும் வ... மேலும் பார்க்க

பழைய நிபந்தனைகளைப் பின்பற்றி கடனுதவி தேவை: பெரம்பலூா் விவசாயிகள்

ஏற்கெனவே உள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி விவசாயிகளுக்கு உடனடியாகக் கடனுதவி வழங்க வேண்டுமென பெரம்பலூா் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமை... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம், முதல்வரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா்கள் சங்க மாநாடு

மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமிக்க வேண்டும் என, சாலைப் பணியாளா் சங்கத்தின் உட்கோட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்டம், குன்னத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தமிழ்நாடு சாலைப் பணியாள... மேலும் பார்க்க

தலைக்கவசம் அணியாதவா்கள் மீது நடவடிக்கை!

தலைக்கவசம் அணியாதவா்கள் மீது அபராதம் விதித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா். பெரம்பலூா் ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வயலில் உள்ள மின் கம்பத்திலிருந்து, கம்பி மூலமாக மின்சாரம் எடுத்தபோது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்த... மேலும் பார்க்க