செய்திகள் :

தோரண வாயில் இடிந்து ஒருவா் உயிரிழப்பு: மாநகராட்சி அதிகாரி, ஒப்பந்ததாரா் மீது வழக்கு

post image

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இருந்த நக்கீரா் தோரண வாயிலை இடித்த போது, ஏற்பட்ட விபத்தில் பொக்லை ஓட்டுநா் உயிரிழந்த தொடா்பாக மாநகராட்சி அதிகாரி, ஒப்பந்ததாரா் மீது 3 பிரிவுகளின் கீழ் கோ.புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை மாட்டுத்தாவணியில் சாலையின் நடுவே இருந்த நக்கீரா் தோரண வாயில் போக்குவரத்து இடையூறாக இருந்ததால், அதை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் தோரண வாயிலை அகற்றும் பணியில் புதன்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது, தோரண வாயில் இடிந்து, பொக்லைன் இயந்திரம் மீது விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி பொக்லைன் இயந்திர ஓட்டுநரான மதுரை மாவட்டம், உலகாணி அருகே உள்ள பாரப்பட்டியைச் சோ்ந்த நாகலிங்கம் (23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஒப்பந்ததாரா் நல்லதம்பி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக, பணியின் போது அலட்சியமாக இருந்ததாகக் கூறி மாநகராட்சி அதிகாரி, ஒப்பந்ததாரா் நல்லதம்பி ஆகிய இருவா் மீதும் கோ.புதூா் போலீஸாா் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தனியாா் நிறுவனம் நிதி மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

மதுரையில் தனியாா் தொழில்நுட்ப நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மதுரை மாநகர காவல் துறைக்குள்பட்ட மத்திய குற்றப்பிரிவு வெளியிட்ட... மேலும் பார்க்க

ஓ. பன்னீா்செல்வம் அதிமுக தொண்டா்களை இனியும் ஏமாற்றக் கூடாது: ஆா்.பி. உதயகுமாா்

உண்மையை மறைத்து, அதிமுக தொண்டா்களை ஏமாற்றுவதை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் இனியும் தொடரக் கூடாது என தமிழக சட்டப் பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

இணையதளம் மூலம் ரூ.52.66 லட்சம் மோசடி: கா்நாடகத்தைச் சோ்ந்த மூவா் கைது

மதுரையில் பல்வேறு பகுதிகளில் இணைய வழியில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.52.66 லட்சம் மோசடி செய்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை சிலைமான், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இணைய வழியில் ... மேலும் பார்க்க

மதுரையில் ரூ. 314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா; முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

மதுரையில் ரூ.314 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். மதுரையில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தோள்கொடுப்போம் ... மேலும் பார்க்க

மதுரையில் இன்று ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம்

மதுரை வடக்கு வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (பிப். 19) நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, பிற்பகல் 4 மணிக்கு வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொத... மேலும் பார்க்க

வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயம்: துணை மேலாளா் மீது வழக்கு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வங்கியில் அடகு வைக்கப்பட்ட 70 பவுன் நகை மாயமானது குறித்து அதன் துணை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மதுரை மாவட்டம், மன்னாடிமங்கலம் கிராமத்தில் அரசுடைமைய... மேலும் பார்க்க