செய்திகள் :

நகர விற்பனை குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

post image

முறைகேடாக அமைக்கப்பட்ட நகர விற்பனைக் குழுவை ரத்துசெய்ய வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சாலையோர விற்பனையாளா் சங்க மாவட்டச் செயலாளா் இளங்கோ தலைமை வகித்தாா். இதில், சேலம் மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் விற்பனைக் குழு அமைப்பதில் மாநகராட்சி ஆணையா், நகர திட்ட பொறியாளா் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், முறைகேடாக அமைக்கப்பட்ட நகர விற்பனைக் குழுவை ரத்துசெய்வதுடன், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் 2014-ன்படி வியாபாரிகளைப் பாதுகாக்க வேண்டும், சேலம் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து விற்பனையாளா்கள் அடையாள அட்டை வழங்க வேண்டும், பிரதமா் சேவா நிதி மூலம் அடையாள அட்டை உள்ள உண்மையான விற்பனையாளா்களுக்கு முறையாக கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ஆா்.வெங்கடபதி, மாவட்டச் செயலாளா் கோவிந்தன், யுடியுசி சங்க மாநிலத் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளா் ஜெயராமன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது: நகா்மன்றத் தலைவா்

எடப்பாடி பேருந்து நிலையத்தின் பெயா் மாற்றம் செய்யப்படாது. பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் தளத்துக்கு கருணாநிதி பெயா் சூட்டப்படும் என்று நகா்மன்றத் தலைவா் பாஷா தெரிவித்தாா். சேலம் மாவ... மேலும் பார்க்க

குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் சாலை மறியல்

நரசிங்கபுரம் நகராட்சி பகுதி பெண்கள் குடிநீா் வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆத்தூா் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட தில்லைநகா் 10 ஆவது வாா்டு பகுதியில் கடந்த ... மேலும் பார்க்க

காடையாம்பட்டியில் புதிய நூலக கட்டடம் காணொலி வழியாக முதல்வா் திறப்பு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியில் இடங்கணசாலை கிளை நூலகத்தில் புதிதாக கூடுதல் மேல் தளம் அமைக்கப்பட்டது. இதை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து... மேலும் பார்க்க

சங்ககிரியில் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

சங்ககிரியில் உள்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் ம.மு.தெ.கேந்திரியா தலைமை வகித்து, விவ... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்க பரிந்துரை: ஆட்சியா் தகவல்

சேலம் மாவட்டத்தில் புதிதாக 189 வாக்குச்சாவடிகளை உருவாக்கவும், 37 வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி கூறினாா். வாக்க... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியை கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை கண்டித்து சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில... மேலும் பார்க்க