செய்திகள் :

நடிகை, எழுத்தாளருக்கு பாலியல் தொல்லை! கேரள காங்கிரஸ் எம்எல்ஏ இடைநீக்கம்!

post image

பாலியல் புகார்களைத் தொடர்ந்து கேரள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராகுல் மம்கூத்ததில் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெரிய அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர் அமைப்பின் மாநிலத் தலைவர் ஒருவர் தனக்கு தொடர்ந்து ஆபாச அனுப்புவதாகவும் ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கடந்த வாரம் குற்றச்சாட்டை எழுப்பினார்.

ரினி ஆன் தனது குற்றச்சாட்டில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், பாலக்காடு எம்எல்ஏவும் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவருமான ராகுல் மம்கூத்ததில் அலுவலகத்துக்கு வெளியே பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் ஹனி பாஸ்கரனும் ராகுலுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், திருநங்கை அவந்திகா, காங்கிரஸ் பெண் தொண்டர்கள் உள்பட பல பெண்கள் ராகுலுக்கு எதிராக குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல் மம்கூத்ததிலை சட்டப்பேரவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர் காங்கிரஸ் இளைஞரணி தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார்.

தற்போது அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்து காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், ராகுல் மீது அதிகாரப்பூர்வமாக புகார்கள் எதுவும் காவல்துறையில் பதிவு செய்யப்படாததால், அவர் சுயேட்சை எம்எல்ஏவாக பதவி வகிக்கலாம் என்று காங்கிரஸ் மாநில தலைவர் சன்னி ஜோசப் தெரிவித்துள்ளார்.

Kerala Congress MLA Rahul Mamkootathil has been suspended from the party following sexual harassment allegations.

இதையும் படிக்க : இந்திரா காந்தி போல அல்ல, பதவிப் பறிப்பு மசோதாவில் பிரதமர் தன்னையும் இணைத்துள்ளார்: அமித் ஷா

இந்தியா - பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்தது! -டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை என்னுடைய முயற்சியாலே முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்: “அனைத்து சண்டைகள... மேலும் பார்க்க

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு! இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்...

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்தான், இத்தகைய பழங்கால புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியா... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: சுவரை உடைத்து தொழிலாளர்களை மீட்ட தீயணைப்புப் படை!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை(ஆக. 25) மாலை 5.15 மணியளவில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதல் பதற்றமான சூழல் அங்கு நிலவுகிறது. ஆலை உள்ளே தொழிலாளர்கள் பலர்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும்: மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே எச்சரித்த இந்தியா!

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் என்று முன்கூட்டியே இந்தியா தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தவீ ஆற்றில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டுக்கு தூதரக ரீதியாக இ... மேலும் பார்க்க

அனைத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

அனைத்து விஷயங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சொந்தம் கொண்டாட நினைப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றவர் அனுமன் என முன்னாள் மத்திய அமைச்சரும் பா... மேலும் பார்க்க

குஜராத்தில் பிரதமர் மோடி சாலைவலம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு!

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஆக. 25) மாலை சாலைவலம் சென்றார். அப்போது வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பளித்தனர்.நலத்திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக அகமதாபாத் நகருக்குச் சென்றுள... மேலும் பார்க்க