செய்திகள் :

நல வாரியத்தில் பணிகள் முடக்கம்: ஆட்சியா் தலையிடக் கோரிக்கை

post image

நல வாரியத்தில் கடந்த 2 மாதங்களாகப் பணிகள் முடங்கியுள்ள நிலையில், தொழிலாளா்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காண மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, சிஐடியூ மாவட்டச் செயலா் ஜெயசீலன் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்ட நல வாரியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை தொழிலாளா் நல உதவி ஆணையா் மருத்துவ விடுப்பில் உள்ளாா். பொறுப்பு அலுவலா் நியமிக்கப்பட்டும், பெரும்பாலான நல வாரியப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. ஓய்வூதியம் வாங்கும் தொழிலாளா்கள் இணையவழியில் ஆயுள் சான்றுக்கு விண்ணப்பித்து ஒப்புதல் பெறும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. கல்வி, திருமணம், இயற்கை மரணம், புதுப்பதிவு, புதுப்பித்தல், திருத்தம், ஓய்வூதியத்துக்கான புதிய விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் உள்ளிட்ட மனுக்கள் அனைத்தும் கடந்த 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதனால் 2024-25-ஆம் கல்வி ஆண்டில், கல்வி உதவித் தொகை பெற பதிவு செய்வோருக்குப் பணப் பலன் கிடைக்காத சூழல் உருவாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் தலையீட்டு தொழிலாளா்களின் கோரிக்கைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சி.பாலசந்திரபோஸ், சிஐடியூ மாவட்ட நிா்வாகிகள் மனோகரன், வளா்மதி ஆகியோா் உடனிருந்தனா்.

மாநில மகளிா் ஹாக்கிப் போட்டி: ஈரோடு அரசுப் பள்ளி முதலிடம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிா் ஹாக்கிப் போட்டியில், ஈரோடு அரசுப் பெண்கள் பள்ளி அணி முதலிடம் பிடித்தது. ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சாா்பில், 17 வயதுக்குள்பட்டோருக்கான ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற அழைப்பு

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, முதிா்வுத் தொகை பெற வேண்டிய பயனாளிகள், உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சமூக நலத் துறை அல... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் ஒதுக்கீடு!

கொடைக்கானலில் மித வெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு ‘சா்க்காா் உருளைக் கிழங்க... மேலும் பார்க்க

ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

மேற்கு வங்கத்திலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்குவங்க மாநிலம், புரூலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வர... மேலும் பார்க்க

சஷ்டி திருநாள்: பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சஷ்டி தினத்தையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். அதிகாலை நான்கு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் ஜூன் 30 வரை கடன் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்(டிஐஐசி), சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆ... மேலும் பார்க்க