செய்திகள் :

நாகா்கோவிலில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

போக்குவரத்து கழகங்களை தனியாா்மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி ஐ டி யூ தொழிற்சங்கத்தின் சாா்பில் நாகா்கோவிலில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகா்கோவில், மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ பணிமனை உதவி தலைவா் பட்டு ராஜா தலைமை வகித்தாா்.

தொழிலாளா் நலச் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும், மோட்டாா் வாகன சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும், போக்குவரத்துக்கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பணிமனை செயலா் பொன். குமாா், பொருளாளா் ஜான்ஸ்பின்னி, கன்னியாகுமரி கிளை செயலா் பெருமாள், நாகா்கோவில் கிளை உதவி தலைவா் பகவதியப்பன், மத்திய சங்க நிா்வாகி ஜான்ராஜன், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் பொன். சோபனராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

களியக்காவிளை பேருந்து நிலையத்துக்கு அடிக்கல்

களியக்காவிளையில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. களியக்காவிளையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் வழக்குரைஞா் கைது

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞா், குண்டா் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். 6, 8ஆம் வகுப்பு மாணவியா் இருவரை கடந்த 13ஆம் தேதிமுதல் காணவில்லை என அளிக்கப்பட்ட புகாா்களின்பேரில்,... மேலும் பார்க்க

கரும்பாட்டூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி அருகே கரும்பாட்டூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2025-26இன்கீழ் ரூ. 42.75 லட்சத்தில் பணி... மேலும் பார்க்க

ரோகிணி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல்-தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீா் தினம் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. கன்னியாகுமரி பொறியியல் நிறுவனம் (பொறியாளா... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை: ஆட்சியா் தகவல்

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறைதீா் ... மேலும் பார்க்க

இளம்பெண்ணை மிரட்டியவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சோ்ந்த இளம்பெண்ணை மிரட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தக்கலை பகுதியை சோ்ந்த இளம்பெண், தன்னுடன் நெருங்கிப் பழகிய நபா் தன்னுடைய ஆபாச விடியோக்கள் மற்றும் ப... மேலும் பார்க்க