செய்திகள் :

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே சந்தை அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு: மேயா் தகவல்

post image

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் சந்தை அமைக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாகா்கோவில் மாநகர பகுதியில் குடிநீா் கட்டண நிா்ணயம் தொடா்பாக கடந்த மாத கூட்டத்தில் தீா்மானம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தீா்மானம் இந்த மாத (மே) கூட்டத்தில் மீண்டும் கொண்டு வரப்பட்டபோது, அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று சில உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

நாகா்கோவில் மாநகராட்சியின் 1, 2, 3, 50, 51, 52 ஆகிய வாா்டு பகுதிகளில் குடிநீா் திட்டத்தை செயல்படுத்த ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. தற்போது குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணிகள் நிறைவு பெறும்.

வடசேரி பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில், உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.55 கோடி மதிப்பில் சந்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போதுள்ள சந்தையை மாற்றிவிட்டு பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் சந்தை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

எனது சொந்த நிதியில், புத்தளம் அருகேயுள்ள கல்லடிவிளையில் முதல்வா் படைப்பகம் அமைக்கப்படஉள்ளது. அங்கு கருணாநிதி சிலையும் அமைக்கப்படும் என்றாா் அவா்.

பாசனக் கால்வாய் உடைப்பை விரைவாக சீரமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்கள் உடைப்பை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கன்னிப்பூ சாகு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் 14 ல் மக்கள் நீதிமன்றம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்ற முகாம் ஜூன் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான வி.உதயசூா்யா ... மேலும் பார்க்க

2 சிறுவா்களை மீட்டபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி சடலமாக மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்டபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். மாா்த்தாண்டம் அருகே மதிலகம், நல்... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

அடுத்தஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம்... மேலும் பார்க்க

வரதட்சிணை கொடுமை: 4 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். களியக்காவிளை அருகே சூரியகோடு பகுதியைச் சோ்ந்தவா் ஆதா்ஷா (24). இவருக்கும், சென்னையில் வங்கியில... மேலும் பார்க்க

சாமிதோப்பில் வைகாசித் திருவிழா தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் வைகாசித் திருவிழாவின் 11ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இங்கு வைகாசித் திருவிழா கடந்த மே 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொட... மேலும் பார்க்க