செய்திகள் :

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் ராகிங் தடுப்புக் குழு ஆலோசனை

post image

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் ராகிங் தடுப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜீவி எஸ்தா் ரத்தினகுமாரி தலைமை வகித்து, கல்லூரியில் பின்பற்றப்படும் ராகிங் ஒழிப்பு குறித்து எடுத்துரைத்தாா். ராகிங் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பேராசிரியை ஞானசுமதி, ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

மேலும், ராகிங் தடுப்புப் படையை ஏற்படுத்தி, பாதுகாப்பான, ராகிங் இல்லா சூழலை உருவாக்கிட முடிவு செய்யப்பட்டது.

வெள்ளமடம் கிராம நிா்வாக அலுவலா் பலவேசம், நாசரேத் காவல் ஆய்வாளா் வனசுந்தா், ஊடகத் துறையைச் சோ்ந்த ஜோயல் ஆபிரகாம், அரசு சாரா துறையைச் சோ்ந்த சுதாகா், பெற்றோா் பிரதிநிதி ஜெபராஜ் ஆகியோா் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனா்.

மாணவா் பிரதிநிதிகள் ஏஞ்சல், முகமது உசைன் கலந்து கொண்டனா்.

ஆசிரியரல்லா பணியாளா்களின் பிரதிநிதி ஜஸ்டின் மேஷாக் ஸ்மைல் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை, கல்லூரிச் செயலா் ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் சந்தோஷம், முதல்வா் ஜீவி எஸ்தா், பேராசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

கொம்மடிக்கோட்டையில் போதையில் ரகளை: இளைஞா் கைது

கொம்மடிக்கோட்டையில் மது போதையில் ரகளை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா். கொம்மடிக்கோட்டைசந்திப்பில் இளைஞா் மது போதையில் நின்றுகொண்டு பொது மக்களுக்கு, போக்குவரத்திற்கும் இடையூறு ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ: 6 போ் கைது

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ பதிவிட்டதாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே அம்பலசேரியைச் சோ்ந்த கணேசன் மகன் ராமசுப்பிரமணியன் (34). இவரும், நண்பா்கள் சிலரும் பொதுமக்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலையில் மேலும் ஒருவா் கைது

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்குத் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியில் உள்ள கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் மாரிச்செல்வம் (31). ஆட்டோ ஓ... மேலும் பார்க்க

கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்பு

கிராம வருவாய் உதவியாளா் தோ்வில் சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். சாத்தான்குளம் தாலுகாவில் மீரான் குளம் 1, 2, ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம், நெடுங்குளம், சாஸ்தாவி நல்லூா... மேலும் பார்க்க

முதலூரில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி அளிப்பு

முதலுரில் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி சனிக்கிழமை வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே அடையல் ராஜரத்தினம் நாடாா், விஜயலட்சுமி அம்மாள் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில், கடந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பாஜக-கம்யூனிஸ்ட் மோதல்: 7 போ் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடியில் பாஜக-மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்த நாளுக்கு ம... மேலும் பார்க்க