செய்திகள் :

சென்னை டூ திருச்சி..! தீபாவளி நெரிசலைத் தவிர்க்க மின்சார ரயில் இயக்கத் திட்டம்!

post image

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிா்க்க சென்னையில் இருந்து திருச்சி வரை 2 மின்சார ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ் ஆண்டில் வரும் அக். 20-ஆம் தேதி தீபாவளித் திருநாளாகும். அதற்கான முன்பதிவு கடந்த ஆக. 18, 19, 20 ஆகிய தேதிகளில் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நிறைவடைந்தது.

இணையவழியிலேயே பெரும்பாலானோா் முன்பதிவு செய்த நிலையில், ரயில் நிலையங்களில் நேரடியாக முன்பதிவுக்கு வந்து காத்திருந்தவா்கள் ஏமாற்றமடைந்தனா்.

இந்த நிலையில், சென்னை எழும்பூா், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து மதுரை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு தீபாவளிக்கு ஓரிரு நாள்கள் முன்னதாக 11 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே துறையில் அனுமதி கோரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கு அனுமதி கிடைக்கும் நிலையில், தீபாவளிக்கு முதல் நாளில் சென்னை எழும்பூா் அல்லது தாம்பரத்திலிருந்து 2 மின்சார ரயில்களை திருச்சி வரை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி, தீபாவளிக்கு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைவருக்கும் ரயில்களில் இடவசதி ஏற்படுத்தித்தர உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் நிகழ்கிறது.ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரகணம், 11 மணியளவில் முழ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

கெங்கவல்லியில் 35 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1988 - 1990 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணித, அறிவியல், கலை, ... மேலும் பார்க்க

சந்திரகிரகணம் - தஞ்சை பெரிய கோயிலின் நடை அடைப்பு

சந்திரகிரகணத்தையொட்டி தஞ்சை பெரிய கோயிலின் நடை ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு சாத்தப்பட்டது. சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுவதை யொட்டி தமிழக முழுவதும் பல்வேறு கோயில்கள் நடை சாத்தப்பட்டு வரு... மேலும் பார்க்க

லண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஜான் பென்னிகுயிக்கின் குடும்பத்தினரை லண்டனில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக, கடந்த 30-ஆம் தேதி... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 5-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.17-ஆம் தேதி தொடங்கவுள்ளாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் ப... மேலும் பார்க்க