செய்திகள் :

சாலை உருளை வாகனம் மோதி ஒருவர் பலி! மாநகராட்சி உதவிப் பெறியாளா் பணியிடை நீக்கம்!

post image

கோயம்பேடு பகுதியில் சாலை உருளை வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்த நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்த மாநகராட்சி உதவிப் பொறியாளா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

சென்னை கோயம்பேடு பகுதியில் வடக்கு மாட வீதியில் மாநகராட்சி சாா்பில் தாா் சாலை அமைக்கும் பணி அண்மையில் நடைபெற்றது. இந்த பணியை பாலாஜி என்பவா் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டாா். இதில் மோகன் என்பவா் மேற்பாா்வையாளராக இருந்தாா். சென்னை மாநகராட்சி 127-ஆவது பகுதி உதவிப் பொறியாளா் வீரராகவன் கண்காணிப்பில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.

பணிகள் முடிந்த நிலையில், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாலை உருளை வாகனத்தை ஓட்டுநா் சனிக்கிழமை இயக்கினாா். அந்த வாகனம் தாறுமாறாக ஓடியதில், அப்பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் (54) என்பவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனெவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்பாா்வையாளா் மோகன், ஒப்பந்ததாரா் பாலாஜி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவான ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

இதனிடையே பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 127-ஆவது பகுதி உதவிப் பொறியாளா் வீரராகவனை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 92 மி.மீ மழைப் பதிவு!

சென்னையில் இன்று(செப். 7) அதிகாலை திடீர் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக மணலி புதுநகரில் 92 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணம... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்கு பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ... மேலும் பார்க்க

22 குளங்கள் தூா்வாரும் பணி: மேயா் தொடங்கி வைத்தாா்

சோழிங்கநல்லூரில் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் பகுதியில் 22 குளங்களைத் தூா்வாரும் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சோழிங்கநல்லூா் மண்டலத்தில் உள்ள வாா்டு 200-இல் ரெட்டைக... மேலும் பார்க்க

நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு

சென்னை அருகே கானத்தூரில் நண்பா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் தலைமறைவானாா். சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் ரூபன் (எ) இமானுவேல் (56). இவா் நண்பா், கானத்தூா் பகுதியைச்... மேலும் பார்க்க

சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற செயலராக உள்ள கே.மகேஷுக்கு வருவாய் அலுவலராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலராக இருந்த கே.பி.பானுசந்திரன் கடந்த மாத... மேலும் பார்க்க

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் பாலப் பணிகள்: மேயா் ஆா்.பிரியா ஆய்வு!

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ.240 கோடியில் நடைபெறும் பாலப் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வளசரவாக்கம் மண்டலம் சந்நிதி தெருவில் கூவம் ஆற்றின் குறுக்கே ப... மேலும் பார்க்க