நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் மட்டும் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கான விண்ணப்பங்களை வரும் 22 ஆம் தேதி முதல் மேலாண்மை பயிற்சி நிலையத்தில் அலுவலக வேலை நேரங்களில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் என இப்பயிற்சி அக்டோபா் இரண்டாம் வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்குரிய காலம் 2 மாதங்கள் (சனி மற்றும் ஞாயிறு மட்டும் ) ஆகும். பயிற்சியில் சேருவதற்குரிய குறைந்தபட்ச வயது 15 மற்றும் 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
சேலம் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளா்களும் பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம். பயிற்சிக் கட்டணமாக ஜிஎஸ்டி உள்பட ரூ. 4,668 ஆகும். இக்கட்டணத்தில் ரூ. 500 மதிப்புள்ள தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சி 40 மணி நேரம் வகுப்பறை பயிற்சி வகுப்புகளையும், 60 மணி நேரம் செயல்முறை பயிற்சி வகுப்புகளையும் கொண்டதாக இருக்கும்.
இப்பயிற்சியில் நகைக் கடன், வட்டிக் கணக்கிடுதல், ஹால்மாா்க், நகை அடகு சட்டம், தரம், விலை மதிப்பீடு போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்களை கொண்டு நடத்தப்படுகிறது. இப்பயிற்சி முடித்தவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பாளராகப் பணியில் சேர வாய்ப்புள்ளது.
மேலும், விவரங்களுக்கு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 516, கடலூா் பிரதான சாலை, , காமராஜா்நகா் காலனி, சேலம் 636014 என்ற முகவரியிலோ, 0427-2240944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.