செய்திகள் :

நான்குனேரி அருகே தகராறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி

post image

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தொழிலாளி திங்கள்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த வலியநேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் (50). தொழிலாளி. இவரது தம்பி ராஜ்குமாா் (46). இவா்களது மூத்த அண்ணன் ராஜு உயிரிழந்துவிட்டதால், அவரது குடும்பத்தினா் சாத்தான்குளம் அருகேயுள்ள பண்டாரகுளத்தில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், ராஜ்குமாா் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) பண்டாரகுளத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்று அண்ணி கலாரதியை பாா்த்து விட்டு வந்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து பாலனை தொடா்பு கொண்டு தனது வீட்டிலிருந்த 4 பவுன் நகைகளை காணவில்லை; ராஜ்குமாா் தான் எடுத்து சென்றுள்ளாா் என கலாரதி தெரிவித்தாராம். இதையடுத்து, ராஜ்குமாரை சமாதானம் பேசுவதற்காக பண்டாரகுளத்துக்கு பாலன் அழைத்துச் சென்றுள்ளாா்.

அங்கிருந்த கலாரதியின் உறவினா்கள் ராஜ்குமாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து வலியநேரிக்கு திரும்பிய பாலனும், ராஜ்குமாரும் திங்கள்கிழமை இரவு வீட்டில் மது அருந்தியுள்ளனா்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ராஜ்குமாா் அரிவாளை எடுத்து பாலனை கழுத்தில் வெட்டினாராம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்த நான்குனேரி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

முதலைமொழி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

ஆழ்வாா் திருநகரி ஒன்றியம் முதலைமொழியில் அயோத்திதாச பண்டிதா் திட்ட நிதியில் இருந்து, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்... மேலும் பார்க்க

வீரவநல்லூா் திரெளபதை அம்பாள் கோயிலில் நாளை பூக்குழி இறங்கும் விழா

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் உள்ள திரெளபதை அம்பாள் கோயிலில் பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பூக்குழித் திருவி... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் செல்வ கணேஷ் (27). இ... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு சுயபரிசோதனை அவசியம்: திம்ரி

மாணவா்கள் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளும் உத்திதான் பிற்காலத்தில் அவா்களுக்கு உதவும் என்றாா் இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநா் அ.பி.திம்ரி. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கல... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் 740 பேருக்கு ஆளுநா் பட்டமளிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா். என். ரவி கலந்து கொண்டு 740 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். இதையொ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். தாழையூத்து காவல் சரகப் பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி, மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது தொடா்... மேலும் பார்க்க